பக்கம்:நற்றிணை-2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின தெளிவுரை 255 உரிமையுடையதாக நீயும் பெற்ருயல்லை. அதனல், நின் அழகிய நுதலிடத்தே பசலையும் படர்ந்தது. பிறராலே தீர்த்தற்கு அருமையுடைய நின் காமநோயை, அண்ங்குத் தாக்கு இது' என்று அன்னை அறியும்ப்டி வேலனும் கூறுவான். இனிய வாச்சியம் பலவும் ஒலிக்கப் பாடியபடியே ப்லவாகிய பூக்களைத் தூவியும் முருகனைத் துதிப்பான். இவ் யாட்டினைப் பலியாக ஏற்றுக் கொள்வாய்ாக் என்று கூறி, அதனை அறுத்துப் பலியும் கொடுப்பான். அவ்வாறு செய்யவும் நின்னேயும் தணிவதா யினால், எவ்விடத்தும் இதனிலும் கொடியதான செயலும் பிறிதொன்று இல்லை கண்டாய்! அதுதான் உண்மையாமோ? கருத்து : 'முருகைப் பரவுதலாலே இந்நோய் தீராது. என்பதாம்: சொற்பொருள் : இதனில் என்றது, முருகைப் பரவி வழிபட்டு, அதனல் தலைவியின் நோய் தணியும் என்று கொண்ட முடிபினை. பிணங்கர் - புதர். வேய் - மூங்கில். விடர்முகை - மலைப்பிளப்பு. பிணவு - பெண்புலி. வாள் வரி - வாள்போன்ற வளைவான கோடுகள்: ஒளியுடைய கோடுகளும் ஆம். உட்கு பசி - அஞ்சத்தக்க பெரும்பசி, அச்சம் - உயிர் போகுமோ என்பதல்ை; இதல்ை பெண்புலி ஈன்றதன் அணிமையதா தலினல் தானே வேட்டைமேற் செல்லற்கு இயலாதது என்பது மாம். தண் கமழ் - தண்மை கமழ்தல். இன்னியம் - துடி, பறை முதலிய வாச்சியங்கள். உள்ளுறை : பெண்புலியின் பசியை உணர்ந்து, அதைப் போக்கக் கருத்தும் ஆண்புலி சிறுவழியிடைப் பதுங்கியிருக்கும். கொடிய குணமுடைய அதுவே, அதன் பிணவின் துயர்போக்கக் கருதிச் செயற்படுகின்றது. அவ்வாறே, தலைவன், விரைவிலே வரைபொருளோடு வந்து, தலைவியை வரைந்து மணந்து கொள்ளுதல் வேண்டும் என்பதாம். விளக்கம் : வேய் உயர்ந்து எறிந்து செறித்தன்ன பிணங் கரில் விடர்.முகை' என்றது, புலி தங்கியிருக்கும் இடத்தின் கொடுமையைக் குறித்தது. உட்குபசி என்றது அளவுகடந்த பசியை. தண்கமழ் வியன்மார்பு' என்றது, அவன் மலர்மாலை சூடியவகை வருதலைக் கருதிக்கூறியதாகும். பரவுறுபலி பரவிச் செலுத்தும் பலி, பலி என்றது ஆடறுத்துத் தரும் குருதிப் பலியின. வேலன் இன்னியம் கறங்கப்பாடிப் பன்மலர் சிதறிப் பரவுறு பலி என்பது இன்றும் உண்மையாதலை, தென்தமிழ் நாட்டுப் பகுதிகளிலுள்ள முருகன் ஆவேசித்துக் குறி சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/259&oldid=774265" இலிருந்து மீள்விக்கப்பட்டது