பக்கம்:நற்றிணை-2.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 361 தெளிவுரை : பரற்கற்கள் மேற்பக்கம் எல்லாம் பரந்து கிடக்கின்ற, சென்று கடத்தற்கு இயலாத வழியிலே, உயர்ந்து தோன்றுவது உப்புவாணிக மாக்கள் நிறைந்துள்ள சிறுகுடி. அவ்விடத்திலே, களர்நிலத்திலே விளைந்த புளியின் காயானது பசியைப் போக்கும். அப்படிப் பசிபோக்கிக் கொண்டு, உயரத்தே ஏறுதலை மேற்கொண்ட உயர்ந்த குடை யினையுடைய புதியவர்களே! யாம் பிரிந்து வரும்போது மலர்ந்த முகத்தோடு விடைதந்தாலும், பின்னர், கண்ணிர் வழிந்து புள்ளிபுள்ளியாக மார்பகத்தை நனைப்ப, எமக்கு விருந்து செய்கின்ற விருப்பினளாக, எம்மை விருந்துண்ணப் பெருதத ஞலே வருந்தியபடியிருக்கும், திருந்திய அணிகளையுடையவளும், விரும்பும் கருமணிபோன்ற புனைதற்குரிய நெடிய கூந்தலை யுடையவளும், இனிய பேச்சை உடையவளுமான அவள் நிலையினை, யாம் முற்றவும் அறிதலை உடையம் ஆவேமோ? ஆகோம்காண் என்பதாம். - கருத்து : “அவள் துயரத்தினை நம்மால் முற்றவும் உணர முடியாது' என்பதாம். - சொற்பொருள் : முரம்பு - வன்னிலம்; மேற்பரப்புக் காலை வருத்தும் பரற்கற்களை கொண்டது. தலைமணந்த - மேற்பக்கம் எல்லாம் பரந்து கிடந்த நிரம்பா இயவு - நடக்க நடக்கத் தொலையாமல் நீள்கின்ற காட்டு வழி. ஓங்கித் தோன்றும் - உயரமான மேட்டு இடத்திலே காணப்படும். உமண் - உப்பு வாணிகர். சிறுகுடி சிற்றார். களரி - களர் நிலம். புளியின் காய் - புளியினது காய். பசி பெயர்ப்ப - பசியைப் போக்க. உச்சிக்கொண்ட - உச்சிநோக்கிச் செல்லுதலை மேற்கொண்ட ஓங்குகுடை-உயர்த்தகுடை: இது வெயிலுக்கு நிழல் பெறுதற்கு உயர்த்தது உச்சிக்கொண்ட ஓங்கு குடை என்பதற்கு, உச்சி மேலே வைத்துக்கொண்டுள்ள உயரமான சோற்றுப் பொதி யினைக் கொண்ட குடை எனவும் பொருள்கொண்டு, உமணர் சிறுகுடி கரிப்புளியைப் போலக் காயும் பசியைப் போக்குவ தற்கு, உச்சிமேற்கொண்ட உயர்ந்த சோறுபொதி குடைகளை உடைய வம்பலீர் எனவும் கொள்ளலாம். முற்றையும் - முழு வதையும். உடையமோ - அறிந்துள்ளேமோ, வீழ் - விரும்பப் படும். மாமணி - கருமணி. புள்ளி - புள்ளிகள்; கண்ணிர் வீழ்ந்து வீழ்ந்து காய்தலால் உண்டாகும் புள்ளிகள். விருந் தய்ர் விருப்பு - விருந்துாட்டும் ஆர்வம்: வயிற்றுப் பசிக்கும் காமப் பசிக்கும் என்று கொள்க. தேமொழி - இனிய பேச் சுடையாள். - р.–28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/365&oldid=774496" இலிருந்து மீள்விக்கப்பட்டது