452
நற்றிணை தெளிவுரை
நற்றிணை தெளிவுரை
யுடையது என்பது பொருள். வாணிக வளத்தாலும் பிற வளத் தாலும் சிறப்புற்றிருக்கலாம். நப்பசலையார் பாடிய பாடல்கள் பிற தொகை நூல்களிலும் காணப்படும். 'புணரிற் புணருமார் எழிலே, பிரியின் மணிமிடை பொன்னின் மாமை சாய, என் அணிநலம் சிதைக்குமார் பசலை' எனப் பசலையை நயம்பட இச் பெயர் செய்யுளிற் கூறுவதாலும் இவர் 'நப்பசலை' எனப் பெற்றிருக்கலாம். 'அசுணங் கொல்பவர் கைபோல், - விறலோன் மார்பு - நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே' என்று பிரிவின் கொடுமையை இவர் மனமுருக எடுத்துரைப்பர்.
மிளைகிழான் நல்வேட்டனார் 210, 349
நல்வேட்டன் என்னும் பெயருடைய இவர் மிளை என்னும் பகுதிக்கு உரிமைபெற்று 'மிளை கிழான்' எனப் பெற்றனராக லாம். மிளை-காவற்காடு; ஆகவே, இவ்வூர் காவற்காடு சூழ்ந் திருந்த ஊர் என்பதும் அறியப்படும். இவர் செய்யுட்கள் உலகியல் அறத்தை நுட்பமாக உரைப்பதுடன், இயற்கை எழிலையும், மக்கள் வாழ்வியலையும் நன்கு ஓவியப் படுத்தும் செறிவு பெற்றனவுமாகும்.
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று, தம் செய்வினைப் பயனே! சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே'
என்று திட்பமாக உரைத்த செவ்வியர் இவர் (210) இவருடைய நெய்தற் செய்யுள் காமநோயால் வருந்தும் தலைவனின் நெஞ்சத்தின் நல்ல படப்பிடிப்பு ஆகும் - 349.
முக்கல் ஆசான் நல்வெள்ளையார் 272
முக்கல் என்னும் ஊரினர்; ஆசிரியர் தொழில் செய்தவர்; வெள்ளையார் என்னும் பெயரினர். 'என் சிறுமை அம்பல் மூதூர் அறிந்தது, அது யான் கொண்ட நோயினும் பெரிதாக என்னை வருத்துகின்றது' எனத் தலைவியின் மனத்துயரைக் காட்டும் இவர் செய்யுள் உருக்கமானதாகும்.
முடத்திருமாறன் 228
மாறன் என்னும் பெயர் இவரைப் பாண்டிய மரபினர் எனக் காட்டும். ஔவையவர்கள் இவனைத் தொண்டை நாட்டு
T