உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

நற்றிணை தெளிவுரை


ஆணையிடுவது

உணர்த்தக் கருதுகின்றாள். உழவர்க்கு போல நுட்பமாக இப்படிச் சொல்லுகின்றாள்.)

மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின் பெருநெற் பல்கூட்டு எருமை உழவ! கண்படை பெறாஅது, தண்புலர் விடியல், கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ்சோறு கவர்படு கையை கழும மாந்தி,

நீர்உறு செறுவின் நாறுமுடி அழுத்த நின் நடுநரொடு சேறி ஆயின், அவண

சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில் மா இருங் கூந்தல் மடந்தை

ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே.

5

10

மலையினைக் சுண்டாற்போலத் தோன்றும் நிலை யினைப் பொருந்திய, உயர்ச்சிகொண்ட பல நெற்கூடுகளை ஒருங்கே சேரக் கட்டி வைத்திருக்கின்ற தலைவியது வீட்டாரின் பொருட்டாக, எருமையை ஓட்டியபடி உழுதற்குச் செல்லுகின்ற உழவனே! இரவெல்லாம் உறக்கங் கொள்ளாயாய்க், குளிர்ச்சிகொண்ட இருள்நீங்கும் விடியற் பொழுதிலே, சுருங்கண்களையுடைய வராஅலின் பெரிதான ஊன்துண்டுகளின் மிளிர்வையோடு கூடிய உணவுக்குரிய அரிசியாலே சமைத்த மிக்க சோற்றுத் திரளைகளை, விருப்பமிக்க கையை உடையையாய்த் திகட்டுமளவுக்கு வாங்கி உண்டதன் பின்னர், நீர்மிகுந்த வயற்புறங்களிலே நாற்றுமுடிகளை நடுதற் பொருட்டாக, நடுதற்கு உரியவ ரான நின் உழத்தியரோடுஞ் செல்வாயானால், நீ உழுதலைச் செய்யும் அவ் வயல்களிடத்தேயுள்ள கோரைகளையும் நெய்தற் பூக்களையும் களைந்து எறிந்துவிடாது பேணிக் கொணர்வாயாக. எம் இல்லிடத்தேயுள்ள மிச்சு அரிய கூந்தலையுடையாளான தலைவிக்கு. அழகிய வளைகளாக வும், உடுத்தும் ஆடையாகவும் ணிந்து கொள்ளற்கு உரியன அவை தாம்!

கருத்துதலைவி இற்செறிக்கப்பட்டாள்; விரைவிலே மணந்து கோடற்கு முயலுக" என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/121&oldid=1627243" இலிருந்து மீள்விக்கப்பட்டது