உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

நற்றிணை தெளிவுரை


நிலைஎன ஒருவேன் ஆகி
உலமர, கழியும்இப் பகல்மடி பொழுதே! 10

"ஒன்றுபட்டே வாழ்வோம்' என்றுரைத்துக் கூடிய தொன்மைப்பட்ட நட்பினுக்குரியவர் நம் காதலர். அவர் நம்மைப் பிரிந்தார் என்று கலங்கி மயக்கமுற்று, இந்த நல்ல நெற்றியையுடையாளின் நிலைதான் என்னவாகுமோ?" என நினைத்துக் கேட்கின்றாளான புனைத்த இழைகளைப்பூண்டுள்ள தோழியே! இதனையும் கேளாய்:

இம்மென்று ஒலித்து வந்தடையும் வாடைக்காற்றோடு இருளும் மிகுதியாகின்ற பொழுதிலே, மழைத்துளிகளாற் சேறுபட்ட தொழுவிடத்தினின்றும் பெயர்த்துக் கட்டுதற்கு உரித்தான எல்லையிலே, உச்சிப்பக்கமாத் தலைக்கயிற்றைக் கட்டியிருக்கப் பெற்றதாகிய கூழைப்பசுவினது துயரநிலையினைப்போல், யானும் தனிமையாட்டியாக இருந்து வருத்தமுறுமாறு, இந்தப் பகலானது சென்று மடிதலான அந்திப் பொழுதும் இனிக் கழிந்துபோகும். இனி, இரவிடையே எடுத்துச் சொல்லுதற்கும் முடியாதபடியான துன்பமும் என்னை வந்தடையுமே! அதற்கு யான் யாது செய்வேனோ?

கருத்து : 'இரவின் வருகையோடு மிகுதியாக வந்தடையும் பிரிவுத்துயருக்கு எப்படி ஆற்றியிருப்பேன்' என்பதாம்.

சொற்பொருள் : தொன்றுபடு நட்பு – பிறவிதோறும் தொடர்ந்து வருகின்றதான நட்பு பேதுறல் – மயக்கங்கொள்ளுதல். இரைக்கும் - இரைச்சவிட்டு வீசும். இருள்கூர் பொழுது – இருள் மிகுதியாகும் பொழுது. துளி – நீர்த்துளி. துணிதல் அற்றம் – கட்டவிழ்த்துப் பெயர்த்துக் கட்டுதற்குரிய நேரத்தின் எல்லை.

விளக்கம் : துளியுடைத் தொழுவென்றது மழைத்துனிகளின் வீழ்ச்சியால் ஈரமிகுந்த தொழுவத்து தரையினையும், தன்மையையும், அதனிடத்து ஆவிற்கு இருப்புக் கொள்ளதென்பது வெளிப்படை. 'உச்சிக் கட்டிய' என்றது, அதன் தலைக்கயிறு உச்சிப்புறத்தே அசையாது கட்டியிருப்பதனை. இதனால், மழைத்துளிக்கு ஒதுங்கும் வாய்ப்பும் அதற்கில்லை. 'துணிதல் அற்றத்து நிலை' என்றது, மாட்டிற்கு உடையான் அதனை அவிழ்த்துப் பெயர்த்துக் கட்டுதற்கு உரித்தாகிய பொழுதினை அவன் வரவினை அது எத்துணை ஆவலுடன் எதிர்பார்த்துத் துடித்துக் கதறுமோ, அப்படிப்பட்ட நிலையிலே புலம்பி வாடியிருந்தவள் தலைவியென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/215&oldid=1688300" இலிருந்து மீள்விக்கப்பட்டது