உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

நற்றிணை தெளிவுரை


[(து–வி.) வரைபொருளுடன் விரைவிலே வந்துவிடுவதாகக் கூறிக் காதலன் பிரிந்து சென்றான். அவன் சொன்ன நாளின் கெடுக்கழிந்தபின், தலைவியின் ஆற்றாமை மிகுதியாகின்றது. 'அவன் சொற்பிழையான்; விரைய வந்து சேர்வான்' என வற்புறுத்திக் கூறித் தெளிவுபடுத்த முயலுகின்றாள் தோழி. அவளுக்குத் தலைவி உரைப்பதாக அமைந்திருப்பது இச் செய்யுள்.]

'தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க' என்ப மாதோ;
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இருவெதிர் ஈன்ற வேல்தலைக் கொழுமுனை
சூல்முதிர் மடப்பிடி நாள்மேயல் ஆரும் 5
மலைகெழு நாடன் கேண்மை பலவின்
மாச்சினை துறந்த கோள்முதிர் பெரும்பழம்
விடர்அளை வீழ்ந்துஉக் காஅங்கு தொடர்பறச்
சேணும் சென்றுஉக் கன்றே; அறியாது
ஏகல் அடுக்கத்து இருள்முகை இருந்த
குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிர் 10
இன்னும் ஓவார் என்திறத்து அலரே!

'தீமையே இயல்பாகக் காணப்படுவாரது வகையிலும், நாம் அவற்றின் கூறுபாடுகளை முற்றவும் ஆராய்ந்து அறித்ததன் பின்னரே, அவரைத் தீயவரென உணர்தல் வேண்டும்' என்று சான்றோர் கூறுவார்கள்.

சூல் முதிர்ந்த இளம்பிடியானது, தனது அறியாமையினாலே இறுமாப்புற்றதாய்த் தன் வயிற்றுக் கருப்பிண்டம் வழுவி வீழுமாறு, பெருமூங்கில்களிலே துளிர்த்திருக்கும் வேல்முனை போன்ற கொழுமையான முளைகளை, விடியற்காலை வேளையிலே சென்று தின்னும். அத்தகைய மலைப்பகுதி விளங்கும் நாட்டிற்கு உரியோன் நம் தலைவன். அவனிடம் நாம் கொண்ட நட்பானது—

பலாலினது பெரிதான கிளையினை விட்டு நீங்கிய காய் முதிர்ந்த பெரும்பழமானது, மலைப்பிளப்புக்களின் இடைக்கண் உள்ள சுனையிடத்தே வீழந்து அழிந்தாற் போல முற்றவும் தொடர்பு அறுமாறு நெடுநாட்களும் சென்று ஒழிந்தது. அதனைத் தாம் அறியாராய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/229&oldid=1689946" இலிருந்து மீள்விக்கப்பட்டது