உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

நற்றிணை தெளிவுரை


நின்னுடைய நலம் வாய்ந்த மென்மைகொண்ட பணைத்த தோள்களை இப்போது நேராகவே அடைந்துவிட்டோம். ஆதலினாலே, பொரியைப் போலத் தோன்றும் பூக்களை யுடைய புன்கினது அழகிய தகைமைகொண்ட ஒள்ளிய இளந்தளிரினை, சுணங்கு பரந்து அழகு செய்திருக்கும் நின்னுடைய பருத்த முலைகளிடத்தே, அவை என்னை மேலும் தாக்கி வருத்தும் பேரழகினைக் கொள்ளும்படியாக, நீயும் அப்பிக் கொள்வாயாக. நிழலைக் காணும் போதெல்லாம் அவ்விடத்தே நெடும்பொழுது தங்கியிருந்து. வழிநடந்த வருத்தம் நீங்கக் களைப்பாற்றிக்கொள் வாயாக. மணலிடங்களைக் காணும்போதெல்லாம், வண்ட லிழைத்து, அவ்விடத்தே சிறிது விளையாடி இன்புறு வாயாக. ங்ஙனமாக, நெறிகடக்கும் வருத்தத்தைப் போக்கியவளாக, நீயும் இனிதே என்னுடன் செல்வாயாக! கருத்து : *சுரநெறியைக் கடந்து விட்டோம்; இனிச் செல்லும் வழி இனிதானது ஆதலின் இன்புற்றுச் செல்வா யாக' என்று தேற்றுவதாம். சொற்பொருள்: அழிவிலர் - அழிவற்ற நெஞ்சுரத்தை உடையவர்; இவரது முயற்சி பேரின்பத்தை நாடியதாக இருக்கும். அலமரல் - சுழற்சியுடைய. பணைத்தோள் பருத்ததோள். புன்கு - ஒரு வகை மரம்; புங்கு என்றும் வழங்குவர். . விளக்கம்: 'மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும் நறும் தண் பொழில்' என்ற றதனால், வசந்த காலத்தின் வருகையைக் கூறினனாம். ' முலை அணங்கு கொள்ளல், அதன்பால் பேரழகு குடிகொண்டு காண்பாரைத் தாக்கி வருத்தும் செவ்வியைப் பெறுதல். 'தோள் எய்தினன்' ஆதலின், அவன் அதனை விரும்புகின்றான். மேற்கோள்: இதனைப் புணர்ச்சி நிகழ்ந்தபின் வழி வந்த நன்மை கூறி ஏகு என்றது (தொல்.அகத். 41. உரை). எனவும், 'பாலைக்கண் புணர்ச்சி நிகழ்ந்தது (அகத்.15. உரை) எனவும் கூறி, நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர். 10. கைவிடாது காப்பாயாக! பாடியவர்: திணை: பாலை. துறை: உடன் போக்கும் தோழி கையடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/27&oldid=1627149" இலிருந்து மீள்விக்கப்பட்டது