உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

277


144. பேதை நெஞ்சம்!

பாடியவர் : கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆற்றது ஏதத்திற்குக் கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.

[(து–வி.) மழைநாள் இரவிலும் இரவுக்குறி வேட்டு வருதலை உடையானாகிய காதலனின் செயலை நினைந்து பெரிதும் கவலைகொண்டாள் தலைவி. அவன் குறியிடத்துச் சிறைப்புறமாக நிற்பதறிந்தவள், தன் தோழியிடம் கூறுவாள் போல இப்படிக் கூறுகின்றாள்]

பெருங்களிறு உழுவை தாக்கலின், இரும்பிடிக்
கருவிமா மழையின் அரவம் அஞ்சுபு,
போதுஏர் உண்கண் கலுழவும், ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்குஆ கின்றால் தோழி! பகுவாய்ப் 5
பிணவுப்புலி வழங்கும் அணங்களுங் கவலை
அவிர் அறல் ஒழுகும் விரைசெலல் கான்யாற்றுக்
கரையருங் குட்டம் தமியர் நீந்தி
விரவுமலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியா தேற்கே. 10

தோழி! அச்சத்தை மிகக்கொண்ட கடத்தற்கரிய வழியிடையே பிளந்த வாயினைக்கொண்ட பெண்புலி இரை தேடியதாய் உலவியபடியிருக்கும். அவ்விடத்தே, விளங்கிய விரைந்த செலவையுடையதும் கரைகாணற்கு அரிதாமாறு பெருவெள்ளத்தை உடையதுமாகிய காட்டாறும் சென்றபடியிருக்கும். அதனைத் தமியராக நீந்திக் கடந்த, வெள்ளத்து வந்த கலப்பான மலர்கள் படிந்த தோளினராய், நம் காதலரும் இந்த இரவில் வருபவராவார். அப்படி அவர் வருவார் என்பதனை ஆய்ந்தறியாத பேதைமை உடையவளாயினேன் யான். புலியானது பெருங்களிற்றைத் தாக்குதலினாலே கலங்கிய அதன் கரிய பிடியானது தொகுதி கொண்ட கார்மேகத்தைப்போல முழக்கமிட்டுக் கதறுகின்ற ஒலியைக் கேட்டு அஞ்சினேன், நீலமலர் போன்று மையுண்ட கண்கள் கலங்கிக் கண்ணீரைச் சொரியவும், ஆதரவற்ற பேதை நெஞ்சும் கவலையால் பேதுறவுமாக யான நடுங்கி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/278&oldid=1693768" இலிருந்து மீள்விக்கப்பட்டது