உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

295


சொற்பொருள் : மிடைபூ – இடையிட்ட பல பூக்கள்; ஆவிரை, பூளை உழிஞை என்பன. எல் – கதிரவன். விசும்பு - இங்கே மேற்றிசை வானம். புலம்பு – தனிமைத் துயரம். புகற்சி – விருப்பம். வடந்தை – வாடைக் காற்று. துவலை – துளிகள். கையறவு - செயலறுந் தன்மை

விளக்கம் : 'காம நோயானது வயிரமுற்றதனால், மடலேறியாயினும் அவளைக் கொள்வேன்' எனத் துணிந்தான் அவன். நலிவாரைக் காத்துப் பேணுகின்ற மரபினை உடையாரான பெருங்குடியினைச் சேர்ந்தவளாயிருந்தும், அவள்தான் தன்னை நலியச் செய்தல் பெரிதும் பழிக்கத் தகுந்ததென்பதையும் உணர்த்துகின்றான். மாலையில் வந்தடையும் தனிமைத் துயரோடு, வாடையின் தூவலும் அதற்காற்றாவாய்ப் புலம்பும் அன்றில்களது கூக்குரலும் சேர, அவன் துயரம் பெரிதும் பெருகுவதாகும் என்று கொள்க. அன்றில் இரவிடத்து நரலுதலைக் குறுந்தொகை, 160, 177, அகநானூறு 50 ஆகிய செய்யுட்களாலும் அறியலாம்.'கூடியிருப்பாரையும் வருத்தும் வாடையானது, கூடப்பெறாதிருக்கும் நலிவுடையாரைப் பெரிதும் மனந்தளரச் செய்தல் உறுதி' என்பதுமாம்.

பிற பாடம் : 'அன்றில் இயங்கு குரல் அளைஇ'

153. பாழ்காத்த தனிமகன்!

பாடியவர் : தனிமகனார்.
திணை : பாலை
துறை : பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது.

[(து–வி.) தலைவனின் பிரிவினாலே மெலிவுற்ற தலைவி, தன் துயரமிகுதியை இப்படிக் கூறுகின்றாள்.]

குணகடல் முகந்து குடக்குஏர்பு இருளி
மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர்
செம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும்
தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்றுஅற் றாங்கு, 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/296&oldid=1694846" இலிருந்து மீள்விக்கப்பட்டது