உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

நற்றிணை தெளிவுரை


கருத்து : 'இவளை விரைந்து மணந்து கொள்ளுதலே இனிச் செய்தற்கு உரியது' என்பதாம்.

சொற்பொருள் : ஆர் இருள் – அடர்ந்த இருட்டு. கடி – காவல். நகர் – மாளிகை. பல்படர் – பலவான துன்பம். பலவாகப் படரும் காமநோயாதலின் 'படர்' என்றனள்; எருவை – கொருக்கச்சி; ஒருவகைச் செடி; குருக்கத்தி என்பர். அரியல் – கள்; நாரால் அரிக்கப்படுதலை உடையதனால் இப் பெயர் பெற்றது. இமிழ் – முழக்கம். மழை -மேகம்.

விளக்கம் : வழிபிழைக்கச் செய்யும் ஆரிருளையும், சினம்மிக்காரது காவலையும், மழை வரவையும் உரைத்து, இடிக் குரலையும் காட்டி, இரவுக்குறி மறுத்தனள். 'நின்னும் நின் மலையும் பாடி' என்றது, இரவுக்குறி மறுப்பினும், தாம் அவன்பாற் காதற்பெருக்கினம் என்றற்காம். ஐயன்மாரைப் பற்றிக் கூறியது, அவரால் துயர் வரக்கூடுமென அஞ்சி இரவுக் குறியை மறுத்து வரைவு வேட்டதாகும். தலைவனைப் பழியொடு வருவன செய்யாது நீக்குதற்கு அறிவுறுத்துவதும் ஆம். 'மணந்து கூடுதலே இனிச் செய்யத்தக்கது' என்று இதனால் புலப்படுத்துகின்றனள்.

157. நினையும் நெஞ்சம்!

பாடியவர் : இளவேட்டனார்.
திணை : பாலை.
துறை : பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.

[(து–வி.) செய்வினை முடிதலுக்கு முன்பேயே குறித்த கார்ப்பருவம் தோன்றக் கண்டவனாகிய தலைவன் தன் நெஞ்சுக்கு இவ்வாறு கூறிக் கொள்ளுன்றான். தலைவியின் அவலம் மிகுதியாகும் நிலையை நினைந்து வருந்திக் கூறுவதாகவும் கொள்க.]

இருங்கண் ஞாலத்து ஈண்டுதொழில் உதவிப்
பெரும்பெயல் பொழிந்த வழிநாள் அமையத்துப்
பல்பொறி அரவின் செல்புறம் கடுப்ப
யாற்றறல் நுணங்கிய நாட்பத வேனில்
இணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/303&oldid=1708226" இலிருந்து மீள்விக்கப்பட்டது