54
நற்றிணை தெளிவுரை
ஒரு தலைவன். அவன், நேற்றைப் பொழுதிலே நம்மோடுங் கூடியிருந்து, கிளைத்தல் மிக்க சிறுதினைப்பயிரிடத்தே வந்து படியும் கிளிகளைக் கடிந்தவனாகத் தங்கியிருந்தான். தன் குறையைச் சொல்லுதற்கேற்ற இடவாய்ப்பினைப்
பெறாதவனாகி, அவ்விடம்விட்டு அவன் அகன்றும் போயி னான். அவன் அங்ஙனம் பெயர்ந்ததாகிய செயலானது நமக்குத் துன்பந் தருவதன்று. தேனையுண்ணுகின்ற வேட்கையினாலே மலரது செவ்வியைத் தெரிந்து சென்று ஊதாமல், எவ்விடத்தும் சென்று விழுகின்ற வண்டினைப் போன்றவன் அவன். அவ கெடாத அந்தக் காட்சியைக் கண்டும், என் தொடிகள் தாமே கழன்றன. கழன்ற அத் தொடிகளை மீளவும் செறித்துக் கொண்ட எனது பண்பற்ற செய்தியானது, என்னை அகலாத ஒரு நினைப்பாகவே இருக்கின்றதே!
கருத்து: 'அவன் நின்னை நாடியவன்; அவனுக்கு நீயும் அருள்தலைச் செய்வாய்' என்பதாம்.
சொற்பொருள் : அவ்வளை - அழகிதான வளை. வெரிந் முதுகுப்புறம் அசைஇ -தங்கி.
விளக்கம் : 'பிடவினது நறுந்தாது புக்காடிய தும்பி பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் நாடன்' என்றது, 'நின்பாற் கலந்த உள்ளத்தனாகிய அவனிடத்தே. அந்தக் காமத்தாலே ஏற்பட்ட நலிவினை யானும் கண்டேன்' என்ற தாம். 'தாதுண் வேட்கையின் போதுதெரிந்து ஊதா வண்டோரன்னன்' என்றது, 'தகுதிப் பாட்டின் மிக்கா னாகிய அவன், அவனுக்கு ஏற்புடையள் ஆகாத என்னையும் நயக்கும் குறை பாட்டினனாயினன்' எனப் பழித்ததும் ஆம். எனஆகாத என்னையும் அவன் கண்டார் காமுறும் பேரழகன்' என்பாள். அவனைக் கண்டதும், தன் தொடி கழன்றன என்றாள். அதனைத் தான் வலித்ததைக் கூறியது. அவனைத் தான் அடைய நினைத்ததாகிய பேதைமையைத் தடுத்துச் செய்த அறிவுச் செயலைக் கூறியதாகும். இதனால். அவன் தலைவிபால் நாட்டம் உடையவன் என்பதனையும். கண்டார் விரும்பும் கவினுடையவன் என்பதனையும், தலைவிக்கே தகுதி யானவன் என்பதனையும் தோழி குறிப்பாகப் புலப்படுத் தினாள்; அவன் குறையை ஏற்றருளுமாறும் தலைவிக்குச் சொல்லுகின்றாள்' என்க.
மேற்கோள்: 'குறையநயப்பித்தல்' என்னும் துறைக்கே இச்செய்யுளை நச்சினார்க்கினியரும் மேற்கோள் காட்டினர். (தொல் பொருள். 114 உரை.)