பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகள் கல்வி 149 பள்ளிகளில் நன்டபெறும் பல ஒழுங்குமுறையற்ற நிலைகள் மாற்றப் பெறல் வேண்டும். தரத்தொடு உயர்ந்த பண்பும் ஒழுக்கமும் நிறைந்த நல்லாசிரியர்களையே இளங்குழந்தை களைப் பராமரிக்க நியமிக்க வேண்டும். மகளிராயினும் தாயுள்ளம் இல்லாதவர்கள் ஆசிரியராகத் தகுதியற்றவ ராவர். அப்படியே ஆசிரியப் பயிற்சி பெற்ற அனைவருமே நல்லாசிரியராக முடியாது. ஒன்றும் இல்லையானால் வாத்தியார் உத்தியோகம்' என்று குறைந்த சம்பளம் இருந்த அந்த நாளிலேயே பழமொழி இருந்தது. சம்பளம் மிக்கிருக் கும் இன்றோ பலரும் இத்துறைக்கு வருவது இயல்பே. எனினும் பள்ளியை நடத்துபவர்கள் தாயுள்ளமும் பண்பும் ஒழுக்கமும் நிறைந்த பெண்களையே குழந்தைகள் பள்ளி களுக்கு ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். . பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் கல்வியில் கொண்ட பற்றின் காரணமாக எவ்வளவு பணமாயினும் செலவு செய்ய முன்வருவதைப் பயன்படுத்தி, அந்தச் சம்பளம் பெற்றும் அதற்கேற்ற கல்வித்தரம் இல்லையாயின் அது பெருந் தவறாகும். பிள்ளைகளுக்கு விளையாட்டு உணர்வுடன் கல்வி கற்பிக்க எண்ணற்ற துணைக்கருவிகள் உள்ளன. பல பள்ளிகளில் அவை வாங்கப் பெறுவதில்லை; வாங்கி வைத் துள்ள சில பள்ளிகளில் பல ஆசிரியர்கள் அவற்றைப் பயன் படுத்துவதில்லை. இக்குறை நீக்கப் பெறல் வேண்டும். சில பள்ளிகளில் வெறும் பேச்சு மொழியை மட்டும் குழந்தைகளுக்குக் கிளிப் பிள்ளைகளுக்குச் சொல்லுவது போலச்சொல்லிக் கொடுத்து, வெளிப்பகட்டில் செயலாற்று கின்றனர். பெற்றோரில் சிலரும் இந்தப் பேச்சுகளில் மயங்கி மகிழ்கின்றனர். ஆனால் இப்பிள்ளைகள் மேல் வகுப்பிற்கு வரும்போது. பல பாடங்களில் குறையுடையவர்களாக உள்ளனர். எனவே பேச்சு, எழுத்து இரண்டிலும் அந்த இளங்குழந்தைகள் நன்கு பயிற்றிடப் பெறல் வேண்டும்.