பக்கம்:நல்ல சேனாபதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுத் தாலி 99 “புலவளு? அப்படியால்ை உன்னிடம் பரிசுப் பொருள் இருக்குமே; அவற்றை எடுத்து வை” என்று மிரட்டினர்கள்.

"நான் குன்றக்குடியில் முருகனைத் தரிசனம் செய்து கொண்டு வெறுங்கையோடு வருகிறேன். மருத பாண்டி யரிடம் போளுல் ஏதாவது, கிடைக்கும் என்று அவரை நோக்கிப் போகிறேன்.” -

"இந்தப் பெண் பிள்ளையிடம் ஏதாவது இருக் கிறதா?’ என்று திருடர்கள் புலவர் மனைவியைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்கள். -

'இவளிடம் ஒன்றும் இல்லை.” "ஏதாவது நகை இருந்தால் கழற்றி வைக்கச் சொல்.’ -

"நகையா? நாங்கள் ஏழைகள் எங்களிடம் ஏது நகை?' .

அதற்குள் ஒருவன், 'மயிலே, ഥിക്കേ இறகு போடு என்ருல் போடுமா?" என்று கூறிப் புலவரை அடிக்கக் கை ஓங்கினன்.

அதுகண்ட புலவர் மனைவி, "அண்ணே, இவரை ஒன்றும் செய்யாதீர்கள். உண்மையில் எங்களிடம் ஒன்றும் இல்லை. முருகன்மேல் ஆணையாகச் சொல் கிறேன். என்னிடம் இந்தத் தாலி ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் இல்லை' என்று சொல்லித் தாலிக் கயிற்றை எடுத்துக் காட்டினுள்.

அப்போது ஏதோ விலங்கு அருகிலே ஓடியதால் அரவம் கேட்டது. யாரோ வருகிருர் என்ற எண்ணத் தால் திருடர்கள் சட்டென்று அந்தத் தாலிக் கயிற்றை வெடுக்கென்று அறுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/108&oldid=584071" இலிருந்து மீள்விக்கப்பட்டது