பக்கம்:நல்ல சேனாபதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளவரிசை 109

சமீன்தாரிணி தன் நாத்தியைப் பார்த்தாள். அவள் கண்ணில் கேள்விக் குறி படர்ந்தது.

'ஆம் : அப்படிச் செய்தால் உன் விருப்பப்படி நடக்கலாம்' என்று சற்றே பரிகாசம் தொனிக்கும்படி சொல்லிச் சிரித்தாள் இளம் பெண். அவள் ஏதோ பரிகாசமாகப் பேசுகிருள் என்பதை உணர்ந்துகொண் டாள் சமீன்தாரிணி. -

"நீ என்னவோ குறும்பாகப் பேசுகிருய். என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிருய்?"

"ஓர் அரசன் வெயிலில் வெளியே புறப்பட்டான். வெயில் கடுமையாக இருந்தது. அவனுக்குக் கோபம் வந்து விட்டது. இந்த வானம் முழுதும் மறையும் படி பந்தல் போடச் சொல் என்று உத்தர விட்டாணும். அப்படி நீ ஓர் உத்தரவிட்டால் உன் சங்கடம் தீரும்.'

'உன் உவமானம் இருக்கட்டும். அந்த அரசனைப் போல முட்டாள்தனமான செயல் ஒன்று நான் செய்ய வேண்டும் என்கிருய். அது இன்னதென்று சொல், பார்க்கலாம். உன்னுடைய கற்பனை வளத்தை நானும் அறிந்து மகிழ்ச்சி பெறுகிறேன்." -

'உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? நீ நடக்கிற இடமெல்லாம் அழுக்கும் மண்ணும் இராமல் இருக்க வேண்டும் என்று அண்ணுவிடம் சொல்லி ஓர் உத்தரவு போட்டு விடு. அப்போது உன் ஆடை அழுக் காகாமல் இருக்கும். அதாவது நீ மண்ணிலேயே நடக்கக் கூடாது. நீ போகும் இடம் முழுவதும் கல்லி ளுல் தளம் போட்டு விட வேண்டும். அப்படியானல் உன் நாகரிகம் கலையாது. ஆடை புரண்டு புரண்டு பள பளக்கும்”

இன்னும் அந்தப் பெண் குறும்புப் பேச்சை விட வில்லை. ஆனல் இப்போது அவளுடைய அண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/118&oldid=584081" இலிருந்து மீள்விக்கப்பட்டது