தளவரிசை 111
கையில் வைத்திருந்த சிறிய துண்டை அங்கே விரித் தாள். தன் கை வளையைக் கழற்றி அதில் வைத்தாள். பிறகு காலில் இருந்த அணியைக் கழற்றி வைத்தாள்.
அவள் நாத்திக்கு ஒன்றுமே விளங்கவில்லை; “என்ன அண்ணி இது? ஏன் இப்படிச் செய்கிருய்?”
என்று கேட்டாள்.
"பேசாமல் இரு ; திரிகூடாசலபதியின் திருக் கோயிற் பிராகாரம் முழுவதும் கல்லால் தள வரிசை போட வேண்டும். இந்த யோசனையை அந்தப் பெரு மான் உன் வாயிலாக அறிவுறுத்தினன்.”
இப்படிச் சொல்லிக் கொண்டு அந்தப் பெண்மணி மூக்குத்தியைக் கழற்றினுள்; காதணியை எடுத்து வைத் தாள். திருமங்கலியத்தைத் தவிர மற்ற அணிகலன்கள் அனைத்தையும் கழற்றி வைத்து விட்டு, கோயிலில் இருந்த தர்மகர்த்தரை அழைத்து வரச் சொன்னுள்.
"இதோ பாருங்கள்; இந்த அணிகலன்கள் யாவும்
கோயிலுக்கு நான் வழங்கி விட்டேன்” என்று அவரிடம் சொன்னுள்.
“என்ன இப்படித் திடீரென்று யோசனை வந்தது?” என்று கேட்டார் தர்மகர்த்தர். -
“இவ்வளவையும் விற்றுப் பணமாக்குங்கள். இந்தத் திருக்கோயிலின் வெளிப் பிராகாரம் முழுவதும் கல்பாவி விடுங்கள். இந்த அணிகலன்கள் போதவில்லை யானுல் மேற்கொண்டு பொன்னும் பொருளும் அனுப்புகிறேன் ' என்ருள் சமீன்தாரிணி.
“என்ன அண்ணி இது? அண்ணுவுக்குத் தெரி யாமல் இப்படிச் செய்யலாமா?” என்று நாத்தி கேட்டாள். -