பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நல்ல பிள்ளையார்

கமலாவுக்குப் பிள்ளையார் என்றால் மிகவும் பிரியம். எப்போதும் ஒரு மரப்பிள்ளையாரை வைத்து விளையாடிக்கொண்டிருப்பாள், அதற்குப் பூமாலை வாங்கிப் போடுவாள். தனக்கு அம்மா பட்சணம் கொடுத்தால், பிள்ளேயாருக்கு நைவேத்தியம் பண்ணிவிட்டே தின்பாள். "ஏண்டி, இந்தப் பிள்ளையாரை வைத்துக்கொண்டு விடமாட்டேன். என்கிறாயே! நாளைக்கு உனக்குக் கல்யாணமானால் இந்தப் பிள்ளையாரை என்ன செய்வாய் ?" என்று அம்மா கேட்பாள். 'பிள்ளேயாரையும் என் புக்ககத்


ந.பி.-1