பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடந்தது. இது இவர்களுக்கு ஒரு விதமான சந்தேகத்தை உண்டாக்கியது. அப்படியும் இருக்கலாம் ‘Rape’ என்று சந்தேகித்தனர். மார்பு கன்னி என்று அவள் பெயர் சொல்லிக் கொண்டிருந்தது. என்னமோ நடந்திருக்கிறது என்று யூகித்தார்கள்; மற்றைய இடங்களைப் பார்க்க அவர்களுக்குத் துணிவு வரவில்லை. அந்த உரிமை போஸ்டு மார்ட்டம் டாக்டர்களுக்கு என்று ஒதுக்கிவைக் கப்பட்டது.

அன்று இரவு ரோந்துக்குப் போடப்பட்ட காவலர் இருவரும் முதலில் விசாரிக்கப்பட்டனர்.

‘நீங்கள் அந்த நேரத்தில் எங்கே இருந்தீர்கள்?’

அந்த நேரத்தில் பெரிய மழை; டீ கடையை விட்டு வெளியே வரமுடியவில்லை; அவன் ஓசியில் டீ போட்டுக் கொடுத்தான்.

‘அதைக் கேட்கவில்லை’ ‘நீங்கள் டியூட்டியில் டீ குடிக்கலாமா? ‘காப்பி கிடைக்கவில்லை அதுதான் கிடைத்தது ‘கொலை செய்யும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’ ‘வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம் ‘அதற்காகவா அரசாங்கம் சம்பளம் தருகிறது’

‘கொலை நடக்கும்போது நாங்கள் குறுக்கிட்டால் கொலையே நடக்காது; அப்புறம் நமக்கு வேலையே இருக் காது; தடுப்பது நம் கடமை அல்ல; நடக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் நம் டியூட்டி