பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடல்கள் 263 பொய்மகள் பஞ்சாங்கம் பார்ப்பவன் சோதிடமாம் பாவையைத் தான்மணம் செய்தபின்னே நெஞ்சாரக் காதலித் தின்பமுற்றே நீள்புவி மீதென்னைப் பெற்றனரே. சூரிய இனப்பாம்பு கெளவுமொரு தோதான நேரத்தில் தோன்றியதால் ஆரிய நாட்டினர் யாவருமே ஆனந்தத் தாடினர் பாடினரே! பகையைக் கடித்து விழுங்குமொரு பாம்பினைப் போலிந்தத் தெய்வமகள் வகைப்பட்ட நன்மைசெய் வாளென்றே வகுத்தஎன் சாதகம் கூறியதாம்! பொய்யென்று பேரிட்டு நீராட்டிப் புராணப்பா லூட்டிப்பின் தாலாட்டி ஐயர் மகளென்னைச் சீராட்டி ஆரியப் பெண்கள் வளர்த்தனரே! ஐந்து வயது நிறைந்த வுடன் அருமைக் கலைகள் அறிந்திடவே சுந்தர வாலிபர் சூதாடும் துறைதொறும் கல்வி பயின்று வந்தேன்!