பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

நாடக மேடை நினைவுகள்




வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் குறப்பிட்டபடி, இவ்வருஷம் தொடங்கிய தசராக் கொண்டாட்டமானது வர வர வளர்ந்தோங்கி, சென்ற இருபத்தெட்டு வருடங்களாகச் சபையின் கொண்டாட்டங்களில் ஒரு முக்கியமானதாகி விட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த கதையை இனி எழுதுகிறேன். மறுவருஷம் கூடாரம் போதாதென்று ஒரு பெருங்கொட்டகை போட்டோம். இரண்டொரு வருஷங்களுக்குப் பிறகு இதுவும் போதாதபடி இருந்தமையால், விக்டோரியா பப்ளிக் ஹாலில் மேல் மாடியைப் பத்து நாளைக்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். பிறகு எங்கள் சபை ஹாலின் கீழ்ப் பாகத்தைக் குடிக்கூலிக்கு எடுத்துக் கொண்டபொழுது, விக்டோரியா பப்ளிக் ஹாலின்மேல் மாடியையும் கீழ்ப் பாகத்தையும் உயோகிக்கலானோம்! இவ்வாறாக ஆரம்பத்தில் பத்துப் பதினைந்து பெயர்களுடன் ஆரம்பித்த கொண்டாட்டத்தில் பிறகு நாநூறு ஐந்நூறு பெயர்கள் சேர நேர்ந்தது.

இரண்டாம் பாகம் முற்றிற்று