12 நாடோடி இலக்கியம்
சித்திரப் பதுமையிது சிங்காரக் கோயிலிது மற்றப் பதுமையெல்லாம் - தங்கமே மட்டிப் பதுமையடி-ஞானத் தங்கமே
மட்டிப் பதுமையடி . காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைத்ததுபோல் ஊற்றைச் சடலத்துள்ளே - தங்கமே உயிர்கின் றுலாவுதடி - ஞானத் தங்கமே
உயிர்ரின் றுலாவுதடி.
இந்த உடலுக்கு எவ்வளவு காலம் கெளரவமென் பதை அவர் நினைவுறுத்துகிரு.ர்.
சாகுபடிக் கோட்டையிலே சந்தைக்காரன் பேட்டையிலே
ஏகஜனக் கூட்டமடி - தங்கமே ஏமன் வந்தால் ஓட்டமடி - ஞானத்தங்கமே
ஏமன் வந்தால் ஓட்டமடி. ஆடை நமக்கிரவல் அணிந்ததெல் லாமிரவல் - பாடையும் இரவலடி - தங்கமே
பறையனைச் சேருமடி - ஞானத்தங்கமே
பறையனைச் சேருமடி. . . . . . . . . . . * * * அந்தப் பிணத்தை அலங்காரஞ் செய்து.
இந்தப் பிணங்களெல்லாம் - தங்கமே ஏதுக் கழுகுதடி -ஞானத்தங்கமே
ஏதுக் கழுகுதடி. செத்த பிணத்தைச் சீராயலங்கரித்துச்
சாகும் பிணங்களெல்லாம் - தங்கமே சாய்ந்து விழுகுதடி - ஞானத் தங்கமே
சாய்ந்து விழுகுதடி.