பக்கம்:நான்கு நண்பர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“இவரா? ஐயையோ வேண்டவே வேண்டாம். இவர் ஒரே சூடாக இருக்கிறார் என்னால் இந்தச் சூட்டைத் தாங்கவே முடியாது. இவரைக் காட்டிலும் பலசாலியைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்” என்றாள்.

“அப்படியானல், மேகத்தைக் கல்யாணம் பண்ணிக்கொள். மேகம்தான் என்னைவிட பலசாலி. அது அடிக்கடி என்னையே மறைத்துவிடுகிறது” என்றது சூரியன்.

உடனே முனிவர் மேகத்தை வரவழைத்தார். மேகத்தைப் பார்த்ததும், “ஐயோ, இவர் ஒரே கறுப்பு. அடுப்புக் கரி மாதிரி இருக்கிறார். எனக்கு வேண்டாம். இவரைவிட பலசாலிதான் வேணும்” என்றாள்.

“காற்றுத்தான் என்னைவிட பலசாலி. அது என்னைத் துரத்திக்கொண்டே இருக்கும் ” என்றது மேகம்.

முனிவர் காற்றை வரவழைத்தார்.