பக்கம்:நாயகர் பெருமான்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

அபூபக்கர் அவர்களே தொழுகையை நடத்திக்கொண்டிருந்தார்கள். பெருமானவர்கள் வந்ததைக் கண்டதும் அபூபக்கர் அவர்கள் தம் இடத்தை விட்டு விலகிக் கொள்ள முயன்றார்கள். ஆனால் விலக வேண்டாம் என்று குறி காட்டிவிட்டு பெருமானவர்கள் ஹஸரத் அவர்களின் அருகில் இருந்து தொழுகையை நடத்தினார்கள். தொழுகை முடிந்தபின் பெருமானவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள். அதுவே அவர்களின் கடைசிச் சொற்பொழிவாகும்.

அந்தச் சொற்பொழிவில் அவர்கள் ஹஸரத் அபூபக்கர் அவர்களைப் பாராட்டிப் பேசினார்கள். முன்னிருந்த நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாய் மாற்றியது போலத் தம்முடைய அடக்கத் தலத்தை ஆக்கிவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள். அப்படிச் செய்வதைத் தாம் விலக்குவதாக அறிவித்தார்கள். கடைசியில் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி, “முஸ்லிம்களே, நான் எவருக்காவது தீங்கு இழைத்திருந்தால் அதற்கு ஈடு செய்ய ஆயத்தமாயிருக்கிறேன். நான் எவருக்காவது கடன்பட்டிருந்தால் அதைத் தீர்ப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

“ஆண்டவனின் தூதரே, தாங்கள் எனக்கு மூன்று திர்ஹம் கடன்பட்டிருக்கிறீர்கள். எவ்வாறெனில் ஒருமுறை தங்களிடம் ஓர் ஏழைவந்து கேட்டபோது மூன்று திர்ஹம் கொடுக்கும்படி எனக்குக் கட்டளை