பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15



பார்க்கப்படுகிறது. அவள் கிழமாக இருந்தாலும் ஒரு முழம் பூ வைத்தால்தான் அவளுக்குப் பொலிவு சேர்கிறது.

இளைஞர் சிலர், முகத்துக்கு வண்ணத்துகள் பூசி, வருணனைப் பொருள் ஆக விரும்புவது, சரி என்று படவில்லை. பாரதி சொன்னான், 'ஆண் நன்று' என்று; அவன் அழகன் என்பதால் பெருமை இல்லை; நல்லவன் என்பதே அவனிடம் எதிர்பார்க்கப்படுகிறது: தன்னைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு, சட்டைக் காதினைத் தட்டிவிட்டுக் கொண்டிருப்பதைவிட்டு, கடமைகளில் ஈடுபடுவதே அவனுக்குப் பெருமை சேர்க்கும்; ஊன் வளர்த் தேன், உடம்பு வளர்த்தேன்' என்பதில் பெருமை இல்லை; 'அறிவு வளர்த்தேன்; ஆற்றல் மிகுத்தேன் செயலாற்றினேன்' என்பதில்தான் பெருமை விளங்குகிறது.

ஒருவன் துாங்கிக் கொண்டிருக்கிறான்; அவனைத் தட்டி எழுப்பினால் சோம்பல் முரித்து எழுகிறான்; அப்புறம் பார்த்தால் "இவன்தானா அவன்?' என்று வியக்க மாறி விடுகிறான்; துளி விஷம் போதும் உயிரைக் கொல்ல; அது போலத் துளி தாண்டுதல்போதும் கடல் ஏழையும்தாண்ட தொடக்கம்சிறிது எனினும்.அதுவளர்ந்து,விவரம்நிறைந்த தாய் நிறைகிறது; வானை எட்ட விசுவரூபம் எடுக்கிறது.

ஆலம் விதை! சிறிதுதான்; அதில் எந்தக் காக்கை எச்ச மிட்டதோ? தெரியாது; பள்ளிக்கூடத்துச் சிறுவர் போல் அது சுறு சுறுப்பாய் வளர்கிறது. ஒரு பெரிய கூடாரமே அமைக்கிறது; அம் மரத்தின் பசுங்கிளைகளில் எத்தனை நிறப் பறவைகள் வந்து கூடு கட்டுகின்றன? அவை “கிரீச் கிரீச்” என்று கதவு மூடும் சப்தத்தை உண்டாக்கிக்கொண்டு இருக்கின்றன. அதன் நிழலில் யாரோ அமரும் பலகைகள்