பக்கம்:நாலு பழங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

நாலு பழங்கள்

சில நாள் கழித்து மற்றொருவன் வந்தான். அவனிடம், "கல்லைப் போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை வெளியில் எறிவாள்", என்றார். அவனும், இவள் அதிசயப் பெண்கை இருப்பாள் போல் இருக்கிறது; நமக்கு உபயோகப்பட மாட்டாள்' என்று எண்ணிப் போய்விட்டான்.

மறுபடியும் ஒருவன் வந்தான். அவனிடம் முன்னே சொன்ன இரண்டோடு மற்றொன்றையும் சேர்த்துச் சொன்னார். "கல்லைப் போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை வெளியிலே எறிவாள். வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் கலந்து கொண்டு வந்து வைப்பாள்."

வந்தவன் அருண்டு போனான். 'சே, சே! இவள் பெண்ணா, பேயா?' என்று எண்ணிக்கொண்டு போய் விட்டான்.

திரும்பவும் ஒரு புதிய இளைஞன் வந்தான், வித்தியாதரர் வித்தியாவதியின் சுபாவங்களை வரிசையாக அடுக்கினார். இந்தத் தடவை மற்றொன்றையும் கூட்டிச் சொன்னார். "வேகாத கட்டைக் குழம்பை ஊற்றுவாள்" என்று சேர்த்துச் சொன்னார். பாவம்! அந்த இளைஞன் ஒன்றும் பதில் பேசாமல் போய் விட்டான்.

பின்னும் ஒருவன் வந்தபோது வித்தியாதரர். "அவள் இரண்டு மாட்டின் மேல்தான் படுத்துத் தூங்குவாள்" என்பதையும் சேர்த்துச் சொன்னார். அவனும் வந்த வழியே போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/40&oldid=1084875" இலிருந்து மீள்விக்கப்பட்டது