பக்கம்:நாவல் பழம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாக்கிக் கொண்ட சிவராமன்-அவனது சாம்ராஜ்யத்தில் குங்குமமாய்ப் புகுந்து பூவாகத் தளும்பிய பார்வதி இரக்கத்திற்குரிய அம்மாக்கண்ணு-இலட்சியக் கனவு காணும் ஒவியர்---ஒரு பலமாக நிமிர்ந்து பலவீன மாய்ச் சரிகிற சரஸ்வதி--எல்லோரும் இதயவானத்தில் எண்ணப் பறவைகளாய்ச் சிறகடிப்பது மனக்கண்ணில் தெரிகிறது. எங்கள் வீட்டு பால்கணி முற்றத்தில் பதியனிட்ட ரோஜாச் செடியில் முதல் மலர் பூத்திருந்தது. நான் எனது ஞாயிற்றுக்கிழமைத் தோழி (வீட்டுக்காரி)யைப் பார்த்து ரோஜாச்செடி கொண்டை போட்டிருக்கிறதா?’ என்று கேட்டேன். அவள் உடல்பெருத்த திராட்சைக்கனியைப் போன்ற பெரிய "நாவல் பழம்' ஒன்றை எனது இடது உள்ளங்கையில் பரிசாக வைத்துவிட்டுச் சிரித்துக் கொண் டிருந்தாள்! 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/78&oldid=786164" இலிருந்து மீள்விக்கப்பட்டது