இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3
viii
நோக்கமெலாம் கல்விநலம் வளர்ப்பதுவே
யெனக் கொளுநுண் னுணர்வின் மிக்கான் ஏக்கமென்ப தறியாதான் இவனெனச்சொல்
எழில்நலத்தான் இனிய நண்பன்.
பலகலையும் பயின்றுணர்ந்த பண்பாளன் அன்பாளன் பாரோர் போற்றும் நிலையுடைய சான்றாண்மைக் கிலக்கியமாய்
நிலவுபுகழ்க் குரிசில் நெஞ்சின் நலமொன்றே பெருஞ்செல்வ மெனக்கொண்டு
நாடு மகிழ் நலத்தால் நாளும் புலவருள மகிழ்கூர வேண்டுவன
புரிந்துவக்கும் புலமைச் செல்வன்.
ஆங்கிலமும் செந்தமிழும் அறிவியலும்
பயின்றுணர்ந்த அறிவன் கல்வி ஓங்கிவளர் துறையூரில் உயர்நிலைப்பள் ளியின்தலைமை யாசா னாகி பாங்கினுளார் பாராட்ட மாணவர்கள் நன்முறையிற் பயிலச் செய்தான் யாங்குமிவன் அறிவியல்நூல் பயிற்றவல்லான்
எனப்புகலும் ஏற்றம் பெற்றான்.