பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 69

என்று கூறிப் பெட்டியைக்கூட முத்துராமலிங்கத்திடம் கேட்டு வாங்கிக் கொண்டான் சின்னி. - -

காரில் ஏறி உட்கார்ந்த்தும் அவள் அவனிடம் கேட்ட முதல் கேள்வி : - - - "வேலைக்கு எங்க்ப்பா மூலமா நான் ஏதாச்சும்.

பண்ணட்டுமா? -

தயவு செய்து வேண்டாம். இதற்குமேல் அவள் அவனை வற்புறுத்தவில்லை, அவளுடன் காரில் பிரயாணம் செய்வது மிதப்பதுபோல் சுகமான அநுபவமாயிருந்தது. இங்கிதமான நறுமணம் நிறைந்த உயிருள்ள பெரிய பூ ஒன்றைப் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு பேசுவது போன்ற அநுபவமாயிருந்தது அது. ஓர் அழகிய பெண் உடனிருக்கும் போது ஒவ்வோர் ஆணுக்குள்ளும் கிளுகிளுக்கும் பெயர். தெரியாத நளின சொப்பளங்கள் பல உண்டாகின்றன. அவற்றுக்குத்தான் காதல் என்பதாகத் தங்களுக்குத் தெரிந்த மொழியில் அவர்கள் பெயர் சூட்டிக் கொள்கிறார். கள் போலிருக்கிறது. ... . . . . . -

படித்த இளைஞர்கள் யதார்த்த நிலையைக் காண மறுத்துக் கற்பிதங்களில் திளைக்கக்கூடாது என்று எண்ணு. கிறவன் முத்துராமலிங்கம். அவனுக்குத் தெரியாமல், அவனையே கற்பிதங்களில் திளைக்க வைத்திருந்தாள். அவள். - - - -

இவள் சொக்கி மயங்க வைக்கும் ஒரு நறுமணக் கனவு. யதார்த்தங்களிலிருந்து நம்மை வெகு உயரத்துக்குத் அடிப்படையில்லாத 'பொய்யான ஒர் உயரத்துக்குத். துர்க்கிச் செல்லும் ஒரு சுகந்த சொப்பனம்'- என்றெல்லாம்: நினைத்திருந்தும் அவளைக் காண்கிற போதுகளில் அவற்றைத் தானே மறந்து கொண்டிருந்தான் முத்துராம. லிங்கம். - -

ஒரு விநாடி சாலையில் அலறிப் புடைத்துக் கொண்டு ஒடியஅந்தப் பைத்தியத்தின் நினைவு கண்முன் ஒடி

நி-5 -