உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

நிதிநிலை அறிக்கை மீது

வாத்தியார் கணக்குப் போடுவது போல்தான் இருக்கிறது. இவ்வளவு வருவாய், இவ்வளவு செலவு. இவ்வளவு பற்றாக்குறை என்று சொல்லப்பட்டு இருக்கிறதே அல்லாமல் மக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய எந்த நல்ல திட்டமும் இதில் அறிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவர் ஏறத்தாழ 70க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட வரவு செலவுத் திட்டப் புத்தகத்தில் முதலில் இரண்டொரு பக்கங்களில் சொல்லப்பட்டு இருக்கிற புள்ளிவிவரங்களையும், இறுதியிலே பற்றாக்குறை நிமித்தமாக சொல்லப்பட்டு இருக்கிற சில புள்ளி விவரங்களையும் மட்டும் படித்துவிட்டு இவ்வளவு வருவாய், இவ்வளவு செலவு என்று மாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருப்பார் என்று கருதுகிறேன்.

எந்த மக்கள் நலத் திட்டங்களும், சட்டங்களும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். பினாமி நில ஒழிப்புக்கான சட்டம் இந்த கூட்டத்தொடரிலே வர இருக்கிறது. பேருந்துகள் படிப்படியாக தேசியமயமாக ஆக்கப்படுவதற்கான திட்டம், அதற்கான சட்டம் இந்தத் தொடரிலே வர இருக்கிறது. கிராமங்களில் 24 ஆயிரம் பேர் மக்கள் நலப் பணியாளர்கள் அன்னியில் 10 ஆயிரம் பேர் நகர்ப்புறத்திலும் நியமிக்கப் படுவார்கள் என்ற அறிவிப்பு இந்த அறிக்கையில் செய்யப்பட்டு இருக்கிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நான் வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டு இருந்ததைத் தவிர நீராரும் கடல் உடுத்த என்ற தமிழ்த் தாய் வாழ்த்து, அது கடந்த காலத்தில் கழக ஆட்சியில்தான் தமிழ்த் தாய் வாழ்த்தாக எதனைக் கொள்ளலாம் என்று சிந்தித்தபோது மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களுடைய அந்தத் தமிழ்த் தாய் வாழ்த்தினையே ஏற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு அதிலே வருகின்ற சில வரிகள் வாழ்த்திலே அமங்கலமாக வரக்கூடும் என்ற காரணத்தால் அவற்றை எல்லாம் விலக்கி விட்டு நீராடும் கடல் உடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்தினை அரசு விழாக்களில் வாழ்த்தாக அமைத்ததும் கடந்த காலத்திலே திராவிட முன்னேற்றக் கழக