20
நிதிநிலை அறிக்கை மீது
501 கோடி ரூபாய் வருமானம் வந்த 1975-76ல் ஏறத்தாழ, 6 கோடி ரூபாய் பிற்பட்டோர் நலனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றபோது, 1983-84ல் அதாவது இப்போது 1774 கோடி ரூபாய் வருமானம் வருகின்றபோது 15 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கி இருக்கவேண்டும். ஆனால் 5 கோடி ரூபாய் குறைவாக பிற்பட்டோர் நலனுக்காக 10 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இவை, வளர்ச்சிப் பணிகளில் அல்லது பல்வேறு துறைகளில் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நிலைகளை உருவாக்குவதற்குப் பயன்பட முடியாது என்பது என்னுடைய குறைபாடாகும்.
திட்ட ஒதுக்கீடு மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களால் இந்த அறிக்கையிலே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது 1982-83 ஆம் ஆண்டிலே திட்டத்திற்காக ஒதுக்கீடு, மத்திய ஒப்புதல் 711 கோடி ரூபாய் நமக்குக் கிடைத்தது. ஆனால் 1982-83ஆம் ஆண்டுக்கான செலவுகள் 795.93 கோடி ரூபாய் என்று நிதியமைச்சரே பத்திரிகையாளர்களிடத்திலே அறிவித்திருக்கிறார். நிதிநிலை அறிக்கையிலேயும் குறிப்பிட் டிருக்கிறார். ஒப்புதல் கிடைத்தது 711 கோடி ரூபாய்க்கு, 1982-83ல். ஆனால் அதற்கும் மாறாக நாம் செலவழிக்க வேண்டிய மொத்தத் தொகை, அது 795.9 கோடி ரூபாய். கிட்டத்தட்ட 796 கோடி ரூபாய் செலவாகி இருக்கின்ற நேரத்தில் 1983-84ஆம் ஆண்டுக்கு ஒரு ஆயிரம் கோடி ரூபாயாவது கேட்டிருந்தால்தான் இன்னும் அதிகத் திட்ட உதவியை, ஒப்புதலை நாம் பெற்றிருக்க முடியும். ஆனால் என்ன காரணத்தாலோ நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் திங்கள் இறுதியில் 27 அல்லது 28ஆம் தேதி வாக்கில் திருச்சியிலே பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது அவர்கள் கேட்ட கேள்விக்கு விடையிறுத்த நேரத்தில் 800 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் கேட்கப் போவதாகக் கூறினார்கள். 1982-83லே 796 கோடி ரூபாய் திட்ட செலவாகி இருக்கும்போது 800 கோடி ரூபாய்க்குத்தான் அதாவது 796 கோடி ரூபாயுடன் 4 கோடி ரூபாய் உயர்த்தித்தான் நாங்கள் கேட்பதாக இருக்கிறோம் என்று நவம்பர் மாதத்திலே கூறிவிட்டு பிறகு திட்டக்