212
நிதிநிலை அறிக்கை மீது
மானியம் 110 கோடி, இலவச அரிசி ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்குக்கூட இலவச அரிசி வழங்குவதற்கு, 3 தடவை வழங்குவதற்கு 36 கோடி. ஆக 335.38 கோடி ரூபாய் இப்போதும் நாம் மானியமாக வழங்க வேண்டியிருக்கிறது. எனவே ஏறத்தாழ 400 கோடி ரூபாய் அளவிலே இருந்த இந்த மானியத் தொகை இந்த விலை ஏற்றங்களுக்குப் பிறகு, நம்முடைய மொத்தத் தேவையினை மனதிலே வைத்துப் பார்க்கும்போது, 335.38 கோடி ரூபாய் என்ற அளவுக்கு ஆகியிருக்கிறது
୧୮
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஏ னென்றால் அண்டையில் இருக்கிற மாநிலங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இங்கே 2 ரூபாய் சாதாரண அரிசி என்றால், கர்நாடகத்திலே ரூ. 2.70 காசு, சன்ன அரிசி இங்கே 3 ரூபாய் என்றால் 3 கர்நாடகத்திலே ரூ. 3.65 காசு. அங்கே மிகச் சன்னரக அரிசி விற்பனை இல்லை. கேரளாவில், இங்கே 2 ரூபாய் என்றால் அங்கே மோட்டா அரிசி ரூ. 2.66 காசு. சன்ன அரிசி இங்கே 3 ரூபாய், கேரளாவிலே ரூ.3.27 காசு. மிகச் சன்னம் இங்கே ரூ.3.50, கேரளாவிலே ரூ 3.48. 2 காசுதான் குறைவு. மராட்டியத்திலே, இங்கே 2 ரூபாய் மோட்டா அரிசி, அங்கே ரூ. 2.90. சன்ன அரிசி ரூ.3.60, மிகச் சன்னம் ரூ. 3.85. ரிஸ்ஸாவிலே ரூ. 3.80 வரையிலே விற்பனையாகிறது. ரூ.2.95லேயிருந்து ஆரம்பமாகி ரூ.3.80 வரையிலே விற்பனையாகிறது. மேற்கு வங்கத்தில் ரூ. 2.83 சாதாரண அரிசி, சன்னம் ரூ. 3.49, மிகச் சன்னம் ரூ. 3.71. எனவேதான் இந்த அரிசி விலையை ஏற்ற வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதேயல்லாமல் வேறல்ல.
நான் அன்றைக்குச் சொன்னதுபோல், அரிசி விலை ஏறி இருந்தாலும்கூட, மக்களுக்குப் பல நல்வாழ்வுத் திட்டங்கள், பல்வேறு உதவித் திட்டங்கள், பல்வேறு சலுகைகள், விவசாயிகளுக்குப் புதிது புதிதாக வழங்கப்பட்டு வருகிற சலுகைகள், கடன்கள் ரத்து, அவர்கள் வாங்குகிற கருவிகளுக்கு விற்பனை வரியிலே சலுகை, இதுபோன்ற பல்வேறு காரியங்களால் அவர்களுக்கு ஓரளவு தாங்குகிற சக்தி ஏற்பட்டிருக்கிறதென்ற சூழ்நிலையிலேதான் இதையும்