கலைஞரின் சட்டமன்ற உரைகள்
229
திரு. எஸ். டி. உகம்சந்த்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அவசரச் சட்டங்களினால் 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் வருகிறது என்று சொல்லப்பட்டு, இந்தப் பேரவையில் விவாதிக்கப்பட்ட பிறகு, நிர்வாகத்திற்குச் சொல்லப்பட்டிருக்கிற அவசரச் சட்டமே ஒழிய, பேரவையில் விவாதிப்பதற்கு முன்பு இந்த அவசரச் சட்டங்கள் வரவில்லை, (குறுக்கீடு) அதற்கு முன்னால் கொண்டு வர வேண்டுமா வேண்டாமா என்பதை இந்தப் பேரவை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல், 1971ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் இந்த மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்வதற்கு ஒப்புக் கொண்டார்கள் என்றால், அன்றைய தினம் தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் அந்த நிதிநிலையைச் சரியான முறையில் சீராக்க வேண்டுமென்ற காரணத்திற்காக அன்றைக்கு அவர் ஆதரித்தார். வேறு காரணம் இல்லை.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: பிறகு மீண்டும் அவர் ஏன் அதைக் கொண்டு வந்தார். அதற்கு விளக்கம் இல்லை.
, .
பிறகு, 21.3.1981ல் அ. தி. மு. க. அரசினுடைய நிதிநிலை அறிக்கை இந்த மாமன்றத்திலே நாவலர் நெடுஞ்செழியன் அவர்களால் படிக்கப் பெற்றது. அதில் சொல்கிறார்கள். "மதுவிலக்குக் கொள்கையைச் செம்மையாகச் செயற்படுத்த வேண்டும் என்பதில் இந்த அரசும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் உறுதியாகவே இருந்து வந்ததையும், என்றாலும் சட்டவிரோதமாகக் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டும், கள்ளத்தனமாகக் குடிக்கப்பட்டும் வந்ததையும், அனுமதியின்றி கள்ளச் சாராயம் காய்ச்சுவதையும், குடிப்பதையும் கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டதையும் மன்ற உறுப்பினர்கள் அறிவார்கள். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக, ஏழை எளிய குடும்பங்கள் பல இன்னல்களுக்கு உள்ளாவதைக் கண்டு, நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அனுமதிச் சீட்டு பெற்று மது வகைகள் அருந்தும் முறையில் மாற்றங்கள்