232
நிதிநிலை அறிக்கை மீது
கிறோம்.
குடிக்காமல்
வைப்பதற்குத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டிருக் சாக்கடைத் தண்ணீரைக் இருப்பதற்குத்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது" என்று அன்றைய அமைச்சர் நண்பர் எஸ். டி. எஸ். பேசினார். இதைத் தொடர்ந்து தான் அண்ணா தி. மு. க. ஆட்சியில் திரு. எம். ஜி. ஆர். அவர்கள் தலைமையில் மதுவிலக்கு சம்பந்தமான சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் மாற்றப்பட்டன.
இந்த அறிவிப்பினை ஒட்டி 1.5.1981ல் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. 1981 வரையில் தமிழ்நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு பானங்கள் மது உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் இல்லை. 1981க்குப் பிறகு இந்த மதுபானங்கள் தயாரிக்கிற தயாரிக்கிற உரிமையை உரிமையை நான்கு தனி நபர்களுக்கும் கூட்டுறவுத் துறை நிறுவனத்திற்கும் அரசு அளித்தது. ஐ. எம். எஃப். எஸ்., கள், சாராயம் மதுபானங்கள் விற்பனை 1.5.1981 முதல் தொடங்கியது. ஆனால் குடிப்பவர் பெர்மிட் ஒன்று பெற வேண்டுமென்று விதிமுறைகளில் கூறப்பட்டது. இருந்தாலும் அந்த பெர்மிட் முறை நடைமுறையில் இதுவரை சரியாகச் செயல்படவில்லை என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மிக நன்றாக அறிவார்கள்.
கள்ளுக் கடைகள் ஏலம் முறையிலே அனுமதிக்கப் பட்டன. சாராய உற்பத்தி 10 தனிப்பட்ட நபர்களுக்குக் கொடுக்கப்பட்டு சாராயத்தை விநியோகம் செய்கின்ற மொத்த வியாபாரம் 15 தனிப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது தனி நபர்களால் உற்பத்தி செய்யப்பட்டு, தனி நபர்கள் மொத்த வியாபாரிகளாக விநியோகம் செய்யும் திட்டத்தின்கீழ் ஆரம்பத்தில் சில்லறைக் கடைகள் மற்றும் டெண்டர் முறையில் விடப்பட்டன. இவ்வாறு 1983 ஜூலை 27க்கு முன்பு சில்லறை வியாபாரம் ஏலம் மற்றும் டெண்டர் முறையிலே விடப்பட்டன. பிறகு 'டாஸ்மார்க்' நிறுவனம் எடுத்துக் கொண்ட பின்பு, அந்த டெண்டர் முறை பின்பற்றப்படாமல், விண்ணப்பங்கள் பெற்று 'நாமினேஷன்' முறையில் தனிப்பட்டவர்களை ஏஜெண்டுகளாக நியமித்து விற்பனை செய்துவந்தது. இந்த முறை அரசியல் சட்டத்திற்கு,