உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

251

அவரவர்களிடம் திரும்பத் தந்துவிட வேண்டும் என்றும், அது இயலாத காரியம் என்றால் அந்தத் தொகையை முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் அரசுக்கே சேர்த்துவிட வேண்டும் என்றும் தெரிவித்தேன் அவர்களிடத்திலே இருந்து இன்னும் பதில் வரவில்லை. வரி பற்றிய கோரிக்கையைப் பொறுத்தவரையில் பலமுனை வரியிலிருந்து ஒருமுனை வரியாக அனைத்துப் பொருட்களையும் கொண்டு வரும் கட்டத்தில், ஹோட்டல் மற்றும் உணவு விடுதிகளில் விற்கப்படும் பண்டங்கள் மற்றும் பானங்கள் மீது விற்கப்படும் 5 சதவீத பலமுனை வரி தற்போது இந்த மதிப்பீட்டால் 8 சதவீத ஒருமுனை வரியாக மாறி இருக்கிறது.

நிதிநிலை அறிக்கையிலே பலமுனை வரியிலே இருந்த அனைத்துப் பொருட்களையும் ஒட்டுமொத்தமாக ஒருமுனை வரியாக கொண்டுவரும்போது ஒருசில பொருட்களுக்கு 8 சதவீதத்திற்கும் குறைந்த விகிதத்தில் வரி விதிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக அலுமினியப் பாத்திரத்திற்கு 4 சதவீதம்: பித்தளை, செம்பு பாத்திரத்திற்கு 5 சதவீதம்; தங்கம், வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு 4 சதவீதம், காலணி மற்றும் டிரேட் மார்க் சட்டத்தில் பதிவு பெறாதவற்றிற்கு 5 சதவீதம்: ஏலக்காய்க்கு 3 சதவீதம்; ரொட்டி, பிஸ்கட் போன்ற டிரேட் மார்க் சட்டத்தில் பதிவு பெறாத பொருட்களுக்கு 5 சதவீதம். இன்றைக்கு இதே அடிப்படையில் உணவுப் பண்டங்கள் மற்றும் பானங்கள் மீதான விலையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ண

ற எண்ணத்தோடு

8 சதவீத ஒருமுனை வரியை 5 சதவீதமாகக் குறைக்க இந்த அரசு தீர்மானித்து இருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) 1.4.1990 முதல் இது நடைமுறைக்கு வரும்.

அடுத்து பழைய பாக்கி பற்றி திரு. குமரி அனந்தன் அவர்கள் சொன்னார்கள். அதை நான் ஏற்றுக்கொண்டு 1989-90ஆம் ஆண்டுப் பாக்கியை 1990-91ல், மாதத் தவணையில் அவர்கள் கட்டலாம் என்கிற சலுகையை அவர்களுக்கு நான் வழங்குகிறேன்.

திரு. குமரி அனந்தன்: பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இங்கே