உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

279

கவனத்திற்கு வருகிறது. மாநிலத்தினுடைய பற்றாக்குறையை மைய அரசின் பற்றாக்குறையோடு ஒப்பிடக்கூடாது. மாநில அரசின் பற்றாக்குறை ஒரு ஆண்டிலிருந்து அடுத்த ஆண்டிற்கு தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கக்கூடியது. அந்தப் பற்றாக்குறையை வேறு வழியில் சமாளித்தாலன்னியில் அது பெருகிக் கொண்டிருப்பதை குறைக்க முடியாது. தடுக்க முடியாது, மைய அரசு ஒரு ஆண்டினுடைய பற்றாக்குறையை ஈடுகட்ட, அதே ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கியில் கூடுதல் கரன்சி நோட்டுக்களை அச்சடிப்பதன் மூலம்கூட சரிக்கட்டிவிடும். நாம் கரன்சி நோட்டுக்களை அச்சடிக்கின்ற அதிகாரங்களைப் பெற்றவர்கள் அல்ல. அந்த அதிகாரத்தைக் கேட்பவர்களும் அல்ல. அது தவிர வேறு அதிகாரங்களைத்தான், மாநில சுயாட்சி என்ற பெயரால் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் மாநில அரசு பற்றாக்குறையைச் சரிக்கட்ட இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 'வழிவகை முன்பணம்' (Ways and Means Advance) அல்லது 'மிகைப்பற்று' (Overdraft) ஆகியவற்றைக் கடனாகப் பெற்று, அதை ஆண்டிலேயே திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாநில அரசினுடைய பற்றாக்குறை தொடர்ந்து கூடிக்கொண்டு போகிறது. அதைச் சமாளிக்கின்ற பொறுப்பை திறமையோடு நடத்துகின்ற அரசால்தான் நிர்வகிக்க முடியும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் கொள்கிறேன். இந்த நிதி இந்த நிதி நிலையிலே ஒட்டுமொத்தப் பற்றாக் குறை ரூ. 851 கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதே, இதற்கு புதிய வரிச் சலுகைகளை வழங்கியிருக்காவிட்டால் இந்தப் பற்றாக்குறை இன்னமும் கூடக் குறைந்திருக்கக்கூடும். இந்த அளவிற்கு உயர்ந் திருப்பதற்குக் காரணமே உணவு மானியத்திற்கான தொகை ஏற்கெனவே ரூ. 850 கோடி என்பதிலேயிருந்து ரூ. 1,000 கோடியாக இந்த நடப்பாண்டிலே உயர்கிறது. ஆண்டுத் திட்ட ஒதுக்கீடு ரூ. 3,550 கோடியிலிருந்து ரூ.3,700 கோடியாக உயர்கிறது.

Part II Schemes புதிய பகுதி-2 திட்டங்கள் 69.40 கோடி ரூபாய்க்கு இப்போது சேர்க்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க கூடுதலாக 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மொத்த