உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

நிதிநிலை அறிக்கை மீது

மற்ற பொருள்கள் உற்பத்தி குறைந்துவிட்ட இந்த நேரத்திலும் நிலைமை கட்டுக்கடங்காமல் போக அனுமதிக்கப்படவில்லை; இந்திய அரசின் மத்திய தொகுப்பிலிருந்து அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் டன் ஒதுக்கீடு செய்யப்பட இந்த அரசு மத்திய அரசைக் கேட்டு வந்தது. அவர்கள் மாதம் ஒன்றுக்கு 60 ஆயிரம் டன் என்ற அளவிற்கு ஒதுக்கீடு செய்தார்கள். இந்த அளவு நாம் கேட்டதை விட குறைவாக இருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் தக்க தருணத்தில் செய்த உதவிக்கு இந்த அரசு நன்றி கூறிக்கொள்கிறது. ஆக சென்ற ஆண்டு 60 ஆயிரம் டன் மாதம் ஒன்றுக்கு மத்திய தொகுப்பிலிருந்து தமிழக அரசுக்கு அரிசி தரப்பட்டிருக்கிறது, என்பது இந்த அவையிலே வைக்கப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பின் மூலமே உணர்த்தப்படுகிறது. அப்படி 60 ஆயிரம் டன் கொடுத்தவர்கள் இந்த ஆண்டு ஏன் கொடுத்திருக்கக்கூடாது? அதாவது தமிழக அரசு மத்திய தொகுப்பிற்கு தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் கொடுக்காதிருந்தபோதே, 60 ஆயிரம் டன் கொடுத்த மத்திய தொகுப்பு அல்லது மத்திய அரசு இப்போதும் ஏன் தந்திருக்கக்கூடாது என்கிற கேள்வி இயல்பாக எழும்.

M

ஆனால், அப்படிப்பட்ட கேள்வி வேகமாக அல்லது உணர்வு பூர்வமாக எழுகிற நேரத்தில், அதைத் தடுக்கிற வகையில் அல்லது அந்தக் கேள்விக்கு ஒரு தயக்கத்தை ஏற்படுத்துகின்ற வகையில் டெல்லிக்குச் சென்று திரும்பிய நம்முடைய மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுடைய பத்திரிகை நிருபர்களிடையேயான பேட்டி அமைந்துவிட்டது என்பதை நான் கூறாமல் இருக்க முடியாது. 18.2.1983 அன்று டெல்லியிலிருந்து திரும்பிய முதல் அமைச்சர் அவர்களை நிருபர்கள் சந்தித்துக் கேட்கிறார்கள். நிருபர் : 85,000 டன் அரிசியில் ஓரளவாவது ஈடுகட்ட வேண்டுமென்று கேட்டீர்களா? அதற்கு முதலமைச்சருடைய பதில் “அதை இப்பொழுது சொல்ல முடியாது. அவர்களுக்கே நெருக்கடி இருக்கிறது. இந்தியா முழுவதற்கும் சென்ற ஆண்டு கையிருப்பி லிருந்த அரிசியை விட இப்பொழுது அவர்களிடத்திலே அரிசி குறைவு.

இப்பக்