கலைஞரின் சட்டமன்ற உரைகள்
345
பெரம்பலூர் மாவட்டம் - 48 திட்டங்கள். 7 கோடியே 77 லட்சம் ரூபாய் நபார்டு, 78 லட்சம் ரூபாய் மாநிலம்
கரூர் மாவட்டம் - 31 திட்டங்கள். 3 கோடியே 73 இலட்சம் ரூபாய் நபார்டு, 38 இலட்சம் ரூபாய் மாநிலம்.
வீரன் அழகுமுத்து மாவட்டம் - 32 திட்டங்கள். 3 கோடியே 90 இலட்சம் ரூபாய் நபார்டு, 43 இலட்சம் ரூபாய் மாநிலம்.
இராஜாஜி மாவட்டம் - 33 திட்டங்கள். 2 கோடியே 96 இலட்சம் ரூபாய் நபார்டு, 31 இலட்சம் ரூபாய் மாநிலம்.
ஏ.டி. பன்னீர்செல்வம் மாவட்டம் படிக்கத் தேவை யில்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் நம்முடைய மாவட்டம் அது. (சிரிப்பு) ஐந்தே ஐந்து திட்டம்தான். 83 இலட்சம் ரூபாய் நபார்டு, 9 இலட்சம் ரூபாய் மாநிலம். (குறுக்கீடு) அடுத்த ஆண்டு கவனிப்போம். நாம் இரண்டு பேரும் சேர்ந்தே கவனித்துக் கொள்வோம். (சிரிப்பு)
அடுத்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் பற்றி நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் வேதனையோடு நேற்று பேசினார்கள். நான் பட்ஜெட்டைப் படிக்கும்போதே முகம் சுண்டிவிட்டது அவருக்கு. அதைச் சொல்லும்போது, அவரைத்தான் பார்த்தேன் நான். ஆனால் அதிலே இருக்கிற நிலைமையை நாம் யோசிக்க வேண்டும். மாநில விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு 1,500 ரூபாய் தமிழ் நாட்டிலே கொடுக்கிறோம். கேரளாவிலே 1,000 ரூபாய் கொடுக்கிறார்கள். கர்நாடகாவிலே 500 ரூபாய், ஆந்திராவிலே 500 ரூபாய் கொடுக்கிறார்கள். மாநில விடுதலைப் போராட்ட ஓய்வூதியம் பெறும் தியாகிகள் இறந்தால் அவருடைய வாரிசுக்கு நாம் 750 ரூபாய் கொடுக்கிறோம். கேரளாவில் 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். கர்நாடகாவில் 500 ரூபாய். ஆந்திராவில் 250 ரூபாய். மத்திய ஓய்வூதியம் 1,500 ரூபாய் வாங்குகிறார்கள். அவர்களுக்கு நாம் 250 ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஏனென்றால் மாநில விடுதலை வீரர்கள் 1500 ரூபாய் வாங்கும்போது அவர்கள்தான் 1500 ரூபாய் வாங்குகிறார்களே என்று ஒரு போனஸ் மாதிரி 250 ரூபாய் கொடுத்தோம். அதை உயர்த்த