கலைஞரின் சட்டமன்ற உரைகள்
369
அளவிலே, இதைப்போன்ற சட்டங்களை நிறைவேற்றவும், திட்டங்களை உருவாக்குவதற்கும் இருக்கின்ற மன்றம்தான் நாடாளுமன்றம். ஆங்காங்குள்ள மக்களுடைய குறைகளை அறியவும், அவைகளை நிறைவேற்றி வைக்கவும், திட்டங்களை நிறைவேற்றவும் பஞ்சாயத்துக்கள், உள்ளாட்சி மன்றங்கள், உள்ளாட்சித் துறையிலே உள்ளவர்கள், மக்களுடைய பிரதிநிதிகளாகிய இவர்கள் பாடுபட வேண்டும். ஆனால், இப்பொழுது நிலைமை எப்படி ஆகியிருக்கிறது என்றால், உள்ளாட்சி மன்றத் தலைவர் செய்கிற தவறு எல்லாம் எம்.எல்.ஏ.-மீதுதான்; எம்.எல்.ஏ. செய்கிற தவறு எல்லாம் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்களே, அவர்கள் மீதுதான் என்கின்ற அளவிற்கு மக்கள் ஒவ்வொரு காரியத்தையும் ஒவ்வொரு செயலையும் தங்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எம்.பி.-ஆக இருந்தால் என்ன, எம்.எல்.ஏ.-ஆக இருந்தால் என்ன, பஞ்சாயத்துத் தலைவராக இருந்தால் என்ன, உறுப்பினராக இருந்தால் என்ன, ஒன்றியத் தலைவராக இருந்தால் என்ன என்ற பாகுபாடு செய்து பார்க்காமல், எல்லோரையும் சமமாகக் கருதி அந்தப் பக்குவம் வந்து இருக்கிறது நம்முடைய மக்களுக்கு எல்லோரையும் சமமாகக் கருதுகின்ற பக்குவம் வந்து இருக்கின்ற காரணத்தால், கேள்விகளையே கேட்கிறார்கள். எனவே, அதிலேதான் நாம் அதிகக் கவனம் செலுத்தி, இந்த மன்றத்திலே பேசும் போதெல்லாம் எங்கள் ஊருக்கு ஒரு காவல் நிலையம் கொடுங்கள், எங்கள் ஊருக்கு ஒரு தீயணைப்பு நிலையம் கொடுங்கள், அந்த வட்டத்தை மட்டும் பிரித்தீர்களே, எங்கள் வட்டத்தைப் பிரித்துக்கொடுங்கள் என்பது போன்ற இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுகின்ற அளவுக்குத்தான் நிலைமை இந்த மன்றத்திலே இருக்கிறது. நான்
யாரையும்
ய
இந்தக்
தவறாகச்
சொல்லவில்லை. என்னையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன். நிதிநிலையைப் பற்றி, வேறு பல துறைகளைப் பற்றி, நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், என்னையும் சேர்த்து, மாண்புமிகு அமைச்சர்களையும் சேர்த்து, நிறைய இருக்கின்றன. எனவே, ஒவ்வொரு
13 - க.ச.உ (நிஅ) ப-2