கலைஞரின் சட்டமன்ற உரைகள்
உ
371
இருந்தபோது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு அரசுக்குச் சாதகமாக அமைந்தது. எனவே, அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, உச்சநீதி மன்றத்திற்குச் சென்றார்கள். அங்கேயும், உச்சநீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றதே தவிர, அதற்கு இடைக்காலத் தடையாணை பெறப்படவில்லை. எல்லோருக்கும் தெரியும் இடைக்காலத் தடையாணை பெறப்படாவிட்டால் அந்த நடவடிக்கையை எடுத்துக் கொண்டேயிருக்கலாம். ஆனால், அன்றைக்கு ஆட்சி கலைக்கப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னருடைய ஆட்சி அமைந்த நேரத்தில் மாண்புமிகு பீஷ்ம நாராயண் சிங் அவர்கள் ஆளுநராக இருந்தார்கள். அவர்கள் அந்த வரியை வசூல் செய்வதைத் தள்ளிப் போட்டார்கள். அதற்கு அவர்கள் கோப்பிலே எழுதிய காரணம், ‘உச்சநீதிமன்றத்திலே வழக்கு இருக்கிறது. ஆகவே, இப்போது வசூலிக்க வேண்டாம் என்று திரு. பீஷ்ம நாராயண் சிங் அவர்கள் எழுதிவிட்டார்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். அப்படி எழுதிவிட்டார்கள். எழுதிவிட்ட பிறகு, தடை கிடையாதே என்று எடுத்துச் சொல்லியும்கூட, அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல், எப்படியோ வழக்கு இருக்கிறது, வழக்கு முடியட்டும் என்று அவர்கள் எழுதிவிட்டார்கள்.
ய
அதன் பிறகு, 1991ஆம் ஆண்டு புதிய ஆட்சி வந்தது அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய தலைமையிலே புதிய ஆட்சி அமைந்தது. அப்படி அமைந்தபோது கவர்னர் அவர்களால் இதை வசூலிக்க வேண்டாம் என்று குறிப்பிடப் பட்ட அந்தக் கோப்பு, உடனடியாக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் நிதியமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், 31. 7.1991 ல் கையெழுத்திட்டு அந்தக் கோப்பினை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார்கள். முதலமைச்சர் அந்தக் கோப்பைப் பார்த்துவிட்டு, ஒரு வருடம், 4 மாதங்கள்