உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

நிதிநிலை அறிக்கை மீது

ஒட்டுமொத்தப் பற்றாக்குறை குறைந்ததற்கு, மூலதனச் செலவுத் திட்டங்களில் செலவு குறைந்ததுதான் காரணம் என்ற ஒரு பிரச்சினையை அவர் எழுப்பினார். 1998-99ஆம் ஆண்டின் ஒட்டுமொத்தப் பற்றாக்குறை வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டில் 876.67 கோடி ரூபாயிலிருந்து 1998-99ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் 235.73 கோடியாக, அதாவது 640.94 கோடி ரூபாய் குறைந்து உள்ளது. உண்மை. இதில் மூலதனச் செலவில் ஏற்பட்டுள்ள குறைவு 404 கோடி ரூபாய். இதற்கான முக்கிய காரணங்கள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அரசின் பங்குத் தொகையை கூடுதல் மானியமாக வருவாய்க் கணக்கில் மாற்றி அமைத்தால் மூலதனக் கணக்கில் 314 கோடி டி ரூபாய் குறைந்துள்ளது. இது தவிர, உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படவுள்ள சாலைத் திட்டத்திற்கு உலக வங்கியின் ஒப்புதல் இதுவரை கிடைக்காததால், அந்தத் திட்டத்திற்காக 1998-99ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்ட 70 கோடி ரூபாய் என்பது திருத்த மதிப்பீட்டில் 18 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது

கல்வி, மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதாரம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன். பிற்படுத்தப்பட்டோர் நலன். சமூகப் பாதுகாப்பு நலன் போன்ற மற்ற இனங்களில் மூலதனச் செலவிற்கு திருத்திய மதிப்பீட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். வருவாய்க் கணக்கிலே பற்றாக்குறை 23 கோடி ரூபாய் குறைந்துள்ளது. பொதுக் கணக்கிலே உபரி 359 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக ஒட்டுமொத்தப் பற்றாக்குறை திருத்திய மதிப்பீட்டில் 640.94 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது என்பதை நான் விளக்கமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வினுடைய தலைவர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் திருத்த மதிப்பீட்டில் குறைவதற்கு என்ன காரணம், வரவுக் கணக்கில், என்ற ஒரு வினா எழுப்பினார். அவர் அதை ஒரு தாக்குதல் கணையாகத் தொடுக்காமல் ஒரு விளக்கம் பெறுவதற்காகக் கேட்டார். வருவாய் கணக்கில் 1998-99இல் திட்ட மதிப்பீடு 15.039