உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

நிதிநிலை அறிக்கை மீது

அதை முடியாது என்று சொல்லியிருக்கிறோம். நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதைப்போல Kerala pattern மாறுமேயானால், அதனால் நமக்குப் பாதகம் ஏற்படுமேயானால் மறுபடியும் மறுபரிசீலனை செய்யவும் இந்த அரசு தயாராக இருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ச. அழகிரி: ஒரேயொரு Point of Order.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: Point of Order-ஆ இதில் எப்படி Point of order வரும்?

திரு. ச. அழகிரி: Point of clarification. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதல்வர் அவர்களே, இப்போது இரண்டு அரசாணைகளை அறிவித்ததைப் பற்றிச் சொன்னார்கள். பொதுவாகவே தொழில்கள் வர வேண்டுமென்று நாமே விரும்புகிறோம். இப்போது ஒரு தொழிற்சாலை விரிவாக்கத்தில் இருக்கிறது. அவர்களுக்கு 23.1.2000ல் நீங்கள் குறிப்பிட்ட அரசாணையின் பிரகாரம் 2 ஆண்டுகளுக்குள் அவர்கள் உற்பத்தியைத் தொடங்கினால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை இந்தச் சலுகை கிடைக்கும் என்று நீங்கள் அறிவித்தீர்கள். ஆனால், அதன் பிறகு, 7.2.2000லே அந்தச் சலுகையை மாற்றி அறிவித்திருக்கிறீர்கள். வெளியில் என்ன சொல்லப்படுகிறது என்றால், வேறொரு சிமெண்ட் ஆலை பலன்பெற வேண்டும் என்பதற்காக இன்னொரு சிமெண்ட் ஆலையை நீங்கள் நசுக்குகிறீர்கள் என்கிற ஒரு குற்றச்சாட்டு இந்த அரசின் மீது இருக்கிறது. எனவே, 15 தினங்களுக்குள் இரண்டு அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன? கேரளாவில் அவர்கள் மாற்றிக்கொண்ட பிறகு தமிழக அரசு அதை மாற்றிக் கொள்ளுமா? விரிவாக்கத்திற்குச் சலுகைகள் அளிக்குமா? இதைப்போன்ற, தனிப்பட்ட சிமெண்ட் ஆலைகளை நசுக்குகிற போக்குகளை அரசாங்கம் கைவிடுமா என்பதனை அறிய விரும்புகிறேன்.

திரு. பி.ஆர். சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முதல்வர் முதல்வர் அவர்கள் பதிலுரையின்போது விவசாயிகளுக்கு நாங்கள்...