510
நிதிநிலை அறிக்கை மீது
திட்டமாகும். இன்னமும் இந்தியாவிலே சில மாநிலங்களில் கை ரிக்ஷா, மனிதனை வைத்து மனிதன் இழுக்கின்ற கை ரிக்ஷா இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
அடுத்து ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம் ஆதிதிராவிடர் பெருங்குடி மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டித் தருகின்ற திட்டம், குடிசை மாற்று வாரிய திட்டம், குடிநீர் வாரிய திட்டம், பேருந்துகளை நாட்டுடமையாக்கிய திட்டம், போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கிய திட்டம், தொடக்கத்தில் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பயன் அடைந்த இந்தத் திட்டம், இன்று 1 லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்கள் 1 பயன்பெறக்கூடிய அளவுக்கு போக்குவரத்துக் கழகங்கள் இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதை அறிவீர்கள்
குடியிருப்பு மனைச் சட்டம் என்ற ஒரு புரட்சிகரமான சட்டத்தை, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலேதான் 1970 ஆம் ஆண்டு வாக்கிலே கொண்டு வரப்பட்டது. நிலங்களிலே பணியாற்றுகின்ற தொழிலாளர்கள், அந்த நிலக்கிழாருடைய தயவினால் அவர்கள் தருகின்ற மனையிலே குடியிருந்து, அவர்கள் விரட்டப்படக்கூடிய ஒரு சூழ்நிலையி லிருந்தது. தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களில் இந்தக் கொடுமை இருந்தது. இதை நீக்குவதற்காக குடியிருப்பு மனைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதனால் பயன்பெற்றவர்கள் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் பேர். அதிலே, ஆதிதிராவிடர்கள் மாத்திரம் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பேர்.
அவர்கள்
இந்தத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியதற்காக பொதுவுடைமை வீரர் மணலி கந்தசாமி திருத்துறைப் பூண்டியிலே அந்த விழாவிலே கலந்துகொண்டு சொன்ன சொல் இன்னமும் என்னுடைய நெஞ்சிலேயே பதிவாகியிருக்கிறது. 'பல துளி இரத்தத்தைச் செலவழித்து கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. "பல துளி பல துளி இரத்தத்தால் சாதிக்க முடியாத ஒன்றை கருணாநிதி, ஒரு துளி மையினால் சாதித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார். (மேசையைத் தட்டும் ஒலி)
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு பண்ணைத் தொழிலாளர்கள் நியாய ஊதியச் சட்டம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தனி அமைச்சகம், பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு ஒன்றை சட்ட நாதன் அவர்கள் தலைமையிலே அமைத்து, அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் முதல் தடவையாக பிற்படுத்தப்
மு