இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காணிக்கை
எங்கள் அருஞ்செல்வனாகப் பிறந்து, தன் பள்ளியின் தொண்டனாக இருந்து, தமிழகக் கல்வித் தொண்டர்களின் தோழனாக வளர்ந்து, பிறிதினோய் தன் நோய் போல் கொண்டு உருகி, பள்ளியில் பலருக்கும் பலவும் கிடைக்கத் தூண்டி, திட்டங்கள் சில தந்து, எனக்கு நேர்மையைப் பளிச்சென்று 'இனிமையோடு காட்டும் குருவாக வாழ்ந்து, "எதற்கும் கவலைப் படாதீர்கள் கோபப் படாதீர்கள் அப்பா' என்று தேற்றி, விரைந்து மறைந்து விட்ட என் ஒரே மகன், குமரகுரு -
திரு. கா. சு. திருவள்ளுவனுக்கு