பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை ஒட்டத்தில் கலந்து வகை வகையான நிகழ்வு களை எதிர்கொண்டு, சுவையாக விவரிப்பதற்கு ஏற்ற பல்வேறு அனுபவங்களை நான் சுவைத்ததுமில்லை. சுவைக்க ஆசைப்பட்டதும் இல்லை. வாழ்க்கை நதியின் ஒரத்தில் ஒதுங்கி நின்று அனைத்தையும் அனைவரையும் சும்மா வேடிக்கையாகப் பார்த்துத் திருப்தி அடைந்த எளியவன் நான். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். 'வல்லிக்கண்ணனின் வாழ்க்கைச் சுவடுகள் நூலால் தமிழ் நாட்டின் இலக்கிய மொழி, சமுதாய, வரலாற்றுச் செய்திகள் தெளிவாகின்றன. அவர் காலத்திய சமுதாய வாழ்வின் சுவடுகளாகவும், மக்களின் பண்பாட்டுச் சுவடு களாகவும் விளங்குவன. அவருடைய எழுத்தின் வரலாறு மட்டுமல்ல, அவர் காலத்திய பிற எழுத்தாளர்களின் எழுத்து வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மானுட நேயத்தின் வரலாறாகவும் விளங்குகின்றது. பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் எனது வாழ்க்கைச் சுவடுகள் நூல் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக் கிறார். இக்கூற்று நிலைபெற்ற நினைவுகள் எனும் இந்த நூலுக்கு அதிகமாகப் பொருந்தும்.