பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 % நிலைபெற்ற நினைவுகள் பயன்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட படத் தயாரிப்பாளர்கள் அவர் கேட்டதை எல்லாம் உரிய முறையில் நிறைவேற்றித் தர எப்பவும் தயாராக இருந்தார்கள். சில வருடங்கள் உல்லாச வாழ்வு வாழமுடித்தது அவரால். பிறகு, சொந்தமாகப் படம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இளங்கோவனையும் பற்றியது. சொந்தக் கம்பெனி ஆரம்பித்து, படத்தயாரிப்பில் ஈடுபட்டார். ஊதாரித்தனமான செலவுகளும் ஆடம்பர வாழ்க்கை முறைகளும் விரைவிலேயே அவரைக் கடனாளியாக்கின. ஆயிரம் ஆயிரமாகப் பணத்தை அலட்சியமாகச் செலவு செய்த அவர் பின்னாளில் பத்துக்கும் பதினைத்து ரூபாய்க்கும் பிறர் உதவியை எதிர்பார்க்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. “ஆறிடும் மேடும் மடுவும் போலாம் செல்வம்’ என்று பழங்காலத்திலேயே புலவர்கள் பாடிவைத்திருக்கிறார்கள். 'பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்றும் பாடியிருக்கிறார்கள். மனிதர்கள் அவரவர் எண்ணங்களினாலும் செயல்களாலும் தங்களைத் தாங்களே ஆக்கியும் கொள்கிறார்கள்: அழித்துப் பாழ்படுத்தியும் கொள்கிறார்கள். வாழ்க்கை இதை எடுத்துக்காட்டியவாறே இருக்கிறது.