பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நிலையும் நினைப்பும் கள் கிடையாது; எட்டுத்திக்கும் வெற்றிமுரசு கொட் டினார்கள்; போரும் காதலும் அவர்கள் போற்றிய பொருள்கள்" என்றெல்லாம் பண்டைத் தமிழ் நாட்டின் நிலையைப்பற்றி எடுத்துக் கூறினால்தான், பாமர மக்களும் நாம் ஆசைப்படுவது போல மீண் டும் தமிழ் நாட்டில் செல்வம் தழைக்கவேண்டும், நல்லெண்ணங்கள் நினைக்கவேண்டும் என்ற நினைப் பைப் பெறமுடியும். ஆனால் அரசாங்கம் இப்படித் தமிழனின் பண் டைப் பெருமையை எடுத்துக்கூறி இன்று மனதில் படர்ந்துள்ள மூட நம்பிக்கைகளை அகற்றுமாறு பகுத்தறிவுப் பிரசாரம் செய்வதை ஆபத்து என்று கருதுகிறது. பல்கலைக் கழகத்தில் பாடப் புத்தகங் களில் பகுத்தறிவு புகுத்தப்படுவதைத் தடை செய் கிறார் கல்வி மந்திரியார். மறைந்த வரலாற்றை மக்களுக்குக் கூறுவது சர்க்காருக்கு வகுப்புத் துவேஷமாம். நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன். மாணவர்களை எங்களுடைய பிரச்சாரங்களைக் கேட்கவேண்டாம் என்று தடுத்தாலும், பல்கலைக் கழகத்தை மூடினாலும், பகுத்தறிவுக்குத் தடைவிதித் தாலும் பிரச்சாரத்தைச் சட்ட விரோதமாக்கி னாலும், அறிவுப் பஞ்சமே உண்டாக அரசாங்கம் ஏற் பாடு செய்தாலும், மண்டபங்களிலே மாந்தோப்பு களிலே, மலைச்சரிவிலே, மரநிழலிலே, பாதை ஓரத் திலே, நாங்கள் பிரசாரம் செய்வோம். எங்களுடைய குரல் எங்கும் எட்டித்தான் ஆகும். எங்களுடைய கருத்து யா ருடைய மனதிலே படவேண்டாம் என்று கருதினார்களோ, அவர்களுடைய மனதில் புகுந்தே