பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 13 . சி.என். அண்ணுத்துரை

கேட்டிருப்பார்கள், மெல்லிய ஆடை அணிந்திருக் கிறீர்களே, அது ஏது என்று. தமிழர்கள் 'அது எங் கள் கைத்திறமை ; இந்திரன் தந்த வரப்பிரசாத மல்ல என்று கூறியிருப்பார்கள். இமயம் வரை சென்று உங்களது இலச்சினையைப் பொறித் திருக்கிறீர்களே, அது எப்படி என்று கேட் டிருப்பார்கள். அதற்குத் தமிழர்கள் 'அது கருடாழ் வார் கடாட்சத்தாலல்ல, எங்கள் தோள் வலிமை யினால் ஏன்று கூறியிருப்பார்கள். இன் ம். னு உங்களது இசை இன்பமாயிருக்கிறதே, அது எப் படி என்று ஆரியர்கள் தமிழர்களைப் பார்த்துக் கேட்டிருப்பார்கள். அதற்குத் தமிழர்கள் நாரதர் தந்தியில் மீட்டிடும் தேவகானமல்ல: நாங்கள் கண்டு பிடித்த யாழின் தன்மையது என்று கூறியிருப் பார்கள். மீண்டும் அந்த யாழ் ஏது என்று கேட் டிருப்பார்கள்.'அது திருப்பாற்கடலில் கடைந்தெடுத் ததல்ல; எங்கள் இசையறிவில் கடைந்தெடுத்தது என்று கூறியிருப்பார்கள். ஆரியர்கள் முத்தைப் பார்த்து 'அது என்ன!' என்றியிருப்பார்கள். அது தேவலோகத்துச் சரக்கல்ல; எமது தீரர்கள் கடல் முழுகிக் கண்டெடுத்த முத்து' என்றிருப்பார்கள். தமிழர்கள். அந்தக் காலநிலை அவர்களுக்கு அத்த கைய நினைப்பைத்தான் தரும். இது வரலாறு கூறு கிற விஷயம். வரலாற்று ஆசிரியர்களும் அறிவார் கள். ஒரு காலத்தில் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்; வந்தவர்கள் வறண்ட நாட்டிலிருந்து வளமான நாடு தேடி வந்தார்கள்; வளமுள்ள நாட் டில் புதிதாக உலவியபொழுது அச்சத்துடனேயே $