பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 சி.என்.அண்ணாத்துரை

சிந்தனைக்குத் தடைவிதித்தாலும் நமது கனம் கல்வி மந்திரி அவினாசிலிங்கம் அடிக்கடி தமது சொற்பொழி விலே "அச்சம் தவிர்" என்ற அச்சரத்தை ஓதிவரு கிறார்.யல்தலைக் கழகம் உங்களுக்கு அளித்திருக்கும் இயச்சினையில் "With Courage and Faith " என்ற வாக்கியம் பொறிக்கப் பட்டிருக்கிறது. ஆதலால் அச்சம் தவிர்" என்று போதனை புரியும் அவினாசி யார் ஆட்சியின் கீழ் தைரியத்தை (Courage) தனது ஒரு முக்கிய பண்பாக உடைய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயமறியாத பருவத்திலுள்ள நீங்கள் எதற் கும் பயப்படத் தேவையில்லை. "பயப்படக் கூடாது. அதுதான் பல்கலைக் கழகத்தின் பண்பாக இருக்க வேண்டும்.பயந்தால் பல்கலைக் கழகத்தின் பண்பே பழிப்புக்கிடமாகும்; அது பண்பு உயர்த்தப்பட வேண்டும் என்பதற்கு அறிகுறி. ஆனால்,அதனால் உங்களுடைய உள்ளத்திலுள்ள கருத்துக்கள் எனது எடுத்துக்காட்டுகளால் மாறவேண்டு மென்ப தல்ல. என்னுடைய கருத்துக்களை வாங்கி உங்க ளுடைய அறிவென்னும் உரைகல்லில் உரைத்து சிந்தனைத் துலோக்கோலால் நிறுத்து, சரியா தப்பா என்று பார்க்க வேண்டும். சரியானதை ஒத்துக் கொள்ளவேண்டும்: ஒத்துக் கொண்டதை ஓம்ப வேண்டும். இது பண்புள்ளவர்கள் செய்யவேண் டிய கடமை: பல்கலைக் கழகம் வளர்க்கவேண்டிய பொருள். இது எனது சொந்த சார்பில் நான் உங்க ளுக்குச் சொல்ல விரும்புகிற நல்லுரை, " "நிலையும் நினைப்பும் என்ற தலைப்பை உங்கள் தொடக்க வீழாச் சொற்பொழிவுக்குத் தந்த