இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
106 நீங்காத நினைவுகள்
கொண்டமைக்கு ஒப்பம் வாங்கி வருமாறு பணித்தேன் இத்துடன் என் ஒன்பதாண்டு பள்ளி வாழ்வு நிறைவு பெற்றது.
1937-முதல் துரையவர்கள் எனக்கு செய்த உதவிகளையும் நான் அவரின்கீழ் பணியாற்றியபொழுது காட்டிய அன்பையும் பரிவையும் நன்றியுடன் போற்றுகிறேன். இதற்கு மேல் அவரிடம் பணிபுரிய எனக்கு ஊழ் இல்லை போலும் என்று நினைவு கூர்கின்றேன்
வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன்மாற் கரியோய்
வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே"
என்ற மணிவாசகப் பெருமான் மணிவாக்குடன் இந்த நீங்காத நினைவுகள் அடங்கி விடுகின்றன."
10 திருவா குழைத்தபத்து-6 11 இன்று துரை இல்லை. திருநாட்டில் வாழ்கின்றார்.