பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மாகர் சிறுகக் குவித்து நிதிக் குவை,
ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய மா கொல்
பகை முகத்த வென் வேலான் பார்வையின் தீட்டும்
நகை முகத்த நன்கு மதிப்பு.38

களைகணாத் தம் அடைந்தார்க்கு உற்றுழியும், மற்று ஓர்
விளைவு உன்னி வெற்று உடம்பு தாங்கார்—தளர் நடையது
ஊன் உடம்பு என்று, புகழ் ஊம்பு ஓம்புதற்கே-
தான் உடம்பட்டார்கள் தாம்.39

தம்முடை ஆற்றலும் மானமும் தோற்று, தம்
இன் உயிர் ஓம்பினும் ஓம்புக!—பின்னர்ச்
சிறு வரை ஆயினும், மன்ற தமக்கு ஆங்கு
இறு வரை இல்லை எனின்.40

கலன் அழிந்த கற்புடைப் பெண்டிரும், ஐந்து
புலன் ஒருங்கப் பொய் கடிந்தாரும், கொலை ஞாட்பின்
மொய்ம்புடை வீரரும், அஞ்சார்—முரண் மறலி
தும்பை முடி சூடினும்.41

புழு நெளிந்து, புண் அழுகி, யோசனை நாறும்
கழி முடை நாற்றத்தவேனும்; விழலர்,
விளிவு உன்னி வெய்து உயிர்ப்பர்; மெய்ப் பயன் கொண்டார்
சுளியார், சுமை போடுதற்கு.42

இகழின் இகழ்ந்தாங்கு, இறைமகன் ஒன்று
புகழினும் ஒக்க புகழ்ப: இகல் மன்னன்
சீர் வழிப் பட்டதே மன்பதை; மற்று என் செய்யும்.
நீர் வழிப் பட்ட புணை?43

செவி சுடச் சென்று ஆங்கு இடித்து அறிவு மூட்டி,
வெகுளினும் வாய் வெரீஇ, பேரா;—கவுள் மதத்த
கைம்மா வயத்ததோ பாகு? மற்று எத் திறத்தும்,
அம் மாண்பினவே, அமைச்சு.44

'சைவரும் வேந்தன் நமக்கு' என்று, காதலித்த
செவ்வி தெரியாது உரையற்க!—ஒவ்வொருகால்
எண்மையனேனும், அரியன் பெரிது அம்மா;
கண் இலன்; உள் வெயர்ப்பினான்.45