பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

புறப்பகை கோடியின் மிக்கு உறிலும், அஞ்சார்;
அகப்பகை ஒன்று அஞ்சிக் காப்ப:—அனைத்து உலகும்
சொல் ஒன்றின் யாப்பார் பரிந்து ஓம்பிக் காப்பவே,
பல் காலும் காமப் பகை.54

புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை
வெளியிட்டு, வேறாதல் வேண்டும்; கழி பெருங்
கண்ணோட்டம் செய்யார்;—கருவி இட்டு ஆற்றுவார்
புண் வைத்து மூடார் பொதிந்து.55

நட்பிடைக் குய்யம் வைத்து, எய்யா வினை சூழ்ந்து,
வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் திட்பம் ஆம்
நாள் உலந்தது அன்றே; நடுவன் நடு இன்மை
வாளா கிடப்பன், மறந்து.56

மனத்த கறுப்பு எனின், நல்ல செயினும்,
அனைத்து எவைாம் தீயவே ஆகும்; எனைத்துணையும்
தீயவே செய்யினும் நல்லவாக் காண்பவே,
மாசு இல் மனத்தினவர்.57

இனியவர் நான் சொலினும் இன் சொல்லே; இன்னார்
கனியும் மொழியும் கடுவே;—அனல் கொளுத்தும்
வெங்காரம் வெய்துஎனினும், நோய் தீர்க்கும்; மெய் பொடிப்பச்
சிங்கி குளிர்ந்தும், கொலும்.58

பொய், குறளை, வன்சொல், பயனில, என்று இந் நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக் காத்து, மெய்யில்
புலம் ஐந்தும் காத்து, மனம் மாசு அகற்றும்
நலம் அன்றே, நல் ஆறு எனல்?59

நல் ஆறு ஒழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும்.
அல்லன செய்தற்கு ஒருப்படார்;—பல் பொறிய
செங் கண் புலிஏறு அறப் பசித்தும் தின்னாவாம்,
பைங் கண் புனத்த பைங் கூழ்.60

குலம் விற்றுக் கொள்ளும் வெறுக்கையும், வாய்மை
நலம் விற்றுக் கொள்ளும் திருவும், தவம் விற்று ஆங்கு
ஊன் ஓம்பும் வாழ்வும், உரிமை விற்று உண்பதூஉம்,—
தான் ஓம்பிக் காத்தல் தலை.61